districts

img

தோழர் எஸ்.பரமசிவம் காலமானார்

சென்னை, பிப். 2- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் எஸ்.பரமசிவம் (78) புதனன்று இரவு (பிப். 1) காலமானார். திருவொற்றியூரில் உள்ள கார்போரண்டம் ஆலையில் தொழிற் சங்கத்தின் முன்னணி ஊழி யராக செயல்பட்டார். இவர்  எம்ஆர்எப், ஐடிசி நிர்வா கங்களின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து நடைபெற்ற வலுவான போராட்டங்களை தொழிற்சங்கத் தலைவர் குசேலருடன் இணைந்து முன்னெடுத்தார். மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவொற்றியூர் எண்ணூர் மணலி பகுதிகுழு உறுப்பி னராகவும், கிளைச் செயலாளராகவும் திறம்பட  செயலாற்றினார். தொழி லாளி வர்க்க நலனுக்காக தனது இறுதி மூச்சு வரை பாடுபட்டார். அவரது உடலுக்கு கட்சி யின் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ஜெயராமன், எஸ்.பாக்கியலட்சுமி, பகுதி  செயலாளர் கதிர்வேல், பகுதி குழு உறுப்பினர்கள் அன்பு, உசேன், வெங் கட்டய்யா, செல்வகுமாரி, கிளைச் செயலாளர்கள் பத்ம நாபன், ஆண்ட்ரூஸ், வேலு மணி, சீனிவாசன் (கட்டு மானசங்கம்),  செம்மல், ரவீந்திரன்(தீண்டாமை ஒழிப்பு முன்னணி) உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து  கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி னர். அவரது உடல் வியாழக்கிழமை (பிப். 2) திருவொற்றியூரில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.