விடுதலைப் போராட்டத்தில் தடம்பதித்த தியாக வரலாற்றின் தளகர்த்தாக்கள், கம்யூனிஸ்ட் பேரியக்கத்தின் மகத்தான தலைவர்கள், தோழர். பி.ராமமூர்த்தி, தோழர். என்.சங்கரய்யா ஆகியோரின் உருவப்படங்களை சிபிஎம் திருவள்ளூர் மாவட்டக் குழு அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், அ.சவுந்தரராசன் திறந்து வைத்து சொற்பொழிவு நிகழ்த்தினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.விஜயன் தலைமையில் பொன்னேரி பகுதி செயலாளர் எஸ்.இ.சேகர் மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் ப.சுந்தரராசன், மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீசெல்வம், ஜி.சம்பத், ஏ.ஜி.கண்ணன், ஆர்.தமிழ்அரசு, முன்னாள் மாவட்ட செயலாளர் கே.செல்வராஜ், மீஞ்சூர் பகுதி செயலாளர் இ.ஜெயவேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.