கள்ளக்குறிச்சி,டிச.18- கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபக தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் மறைந்த பி. ராமமூர்த்தி, என். சங்கரய்யா ஆகியோரது நினைவு போற்றும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் கலந்து கொண்டு, உரையாற்றினார். ஒன்றிய செயலாளர் எஸ்.சிவாஜி தலைமை வகித்தார். இரா பச்சையப்பன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் டி.எம். ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஆனந்தன், எம். கே.பழனி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் சா.சசிகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.