கடலூர்,டிச.13- கம்யூனிஸ்ட் இயக்கத் தின் மகத்தான தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர், தகைசால் தமிழர் தோழர் என்.சங்கரய்யா வின் படத்திறப்பு மற்றும் புகழஞ்சலி கூட்டம் கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கோ. மாதவன் தலைமை வகித்தார். மாநகர செயலாளர் அமர்நாத், ஒன்றிய செய லாளர் பஞ்சாட்சரம், சிப்காட் செயலாளர் எம்.சிவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். என்.சங்கரய்யாவின் படத்தை திறந்து வைத்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி புகழஞ்சலி உரை நிகழ்த்தி னார். மாநிலக்குழு உறுப்பி னர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆறு முகம், வி.உதயகுமார், பி.கருப்பையன், வி.சுப்பு ராயன், ஆர்.ராமச்சந்திரன், எஸ்.திரு அரசு, ஜி.ஆர். ரவிச்சந்திரன், பி.தேன் மொழி, ஜே.ராஜேஷ் கண்ணன் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள், இடைக்குழு செயலாளர் கள் உள்ளிட்ட ஏராளமானவர் கள் கலந்து கொண்டனர். மிக்ஜம் புயல் மற்றும் மழை-வெள்ளத்தால் பாதித்து நோட்டு புத்த கத்தை இழந்த சென்னை மாணவர்களுக்கு இந்திய மாணவர் சங்கத்தின் கடலூர் மாவட்ட குழு சார்பில் நோட்டு, புத்தகம், பேனா, பென்சில், ரப்பர் உள்ளிட்ட பொருட்கள் உ.வாசுகியிடம் வழங்கப்பட்டது.