காஞ்சிபுரம், டிச. 8- விடுதலைப் போராட்ட வீரர், கம்யூனிஸ்ட் பேரியக்கத்தின் மகத்தான தலைவர் தோழர் என்.சங்கரய்யா படத்திறப்பு நிகழ்வு மார்க்சிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டக் குழு சார்பில் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.சங்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் என்.சங்கரய்யா உருவப் படத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் டி.கே.ரங்கராஜன் திறந்து வைத்து பேசினார். பாஜக-ஆர்எஸ்எஸ் மதவாத சக்திகளை எதிர்க்கின்ற திமுக தலைமையிலான தமிழக அரசும், இடதுசாரி களின் கேரள அரசும் இரண்டு ஒளி விளக்குகள். இந்த இருஒளி விளக்குகளை பாதுகாக்கின்ற பொறுப்பு நமது கடமையா கும் என்றார். சங்கரய்யாவை பற்றி நாம் பேசுகின்ற பொழுது வரலாற்றுடன் இணைத்து பேச வேண்டும். திராவிட இயக்க வரலாற்றை யும் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றையும் இன்றைய இளைய தலைமுறைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும். விடுதலை போராட்டத்தில் காங்கி ரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள் ஆற்றியிருக்கக் கூடிய பங்கு தெரிந்திருக்க வேண்டும். ஆர்எஸ்எஸ் என்றகிற இயக்கம் ஆட்சி அதிகாரத்தை எப்படி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது என்பதையும் இந்த ஆபத்தான போக்கு எந்தமுறையில் நம் நாட்டையும், சமூதாயத்தையும் பாதிக்கப்போகிறது என்பதையும் இளைய தலைமுறை தெளி வாக அறிந்துகொள்ளவேண்டும். மேலும் இது கல்வி மற்றும் வாழ்க்கை முறையை எப்படி பாதிக்கபோகிறது. நம் நாட்டின் ஒற்றுமையை பாதிக்கப்படப் போகிறது புரிந்து கொள்ள வேண்டும். இந்த தெளிவு தான் தோழர் சங்கரய்யாவுக்கு நாம் செலுத்தக்கூடிய மிகப்பெரிய அஞ்சலி என்றார் அவர். இந்த நிகழ்ச்சியில் உத்திரமேரூர் சட்ட மன்ற உறுப்பினர் க.சுந்தர், மார்க்சிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டுக் குழு தலைவர் பி.சுந்தரராஜன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.ஆறுமுகநயினார், இ.முத்துகுமார், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.நேரு உள்ளிட்டோர் பேசினர். திமுக காஞ்சிபுரம் மாநகரச் செயலாளர் தமிழ்செல்வன், மாநகரச் செயலாளர் டி.ஸ்ரீதர், உள்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மதுசூதனன் நன்றி கூறினார்.