கிருஷ்ணகிரி,ஜன.2- சுதந்திர போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா படத்திறப்பு விழா கிருஷ்ண கிரியில் தோழர். அண்ணாஜி நினைவ கத்தில் நடைபெற்றது. மாவட்டச் செய லாளர் ஜி.கே. நஞ்சுண்டன் தலைமை தாங்கி னார். மாநிலக் குழு உறுப்பினர்கள் கே.சாமி நாதன், பி.டில்லிபாபு ஆகியோர் கலந்து கொண்டு சங்கரய்யா படத்தை திறந்து வைத்து உரையாற்றினர். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சேகர், இருதயராஜ், சாம்ராஜ், கோவிந்த சாமி, மகாலிங்கம்,ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி,சுரேஷ்,ஜெயராமன், பிரகாஷ் முன்னிலை வகித்தனர். இடைகமிட்டி செயலாளர்கள் தளி வெங்கடேஷ், அஞ்செட்டி தேவராஜன், கிருஷ்ணகிரி ராஜா, ஓசூர் ராஜாரெட்டி, சிங்காரப் பேட்டை சபாபதி, சூளகிரி முனியப்பா, போச்சம்பள்ளி சாமு, கெலமங்கலம் ராஜா, பர்கூர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.