districts

img

தோழர் மணிவாசகம் காலமானார்

சென்னை, ஏப். 24- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவொற்றியூர் கார்கில் நகர் ‘பி’ கிளைச் செயலாளரும், கட்டு மான சங்கத்தின் திருவொற்றியூர் பகுதி துணைச் செயலாளருமான தோழர் மணிவாசகம் (60) புதனன்று (ஏப். 24) காலமானார். இவர் கார்கில் நகர் பகுதியில் வாலிபர்களை திரட்டு வதிலும், கட்டுமான தொழிற்சங்கத்தை வளர்த்தெடுப்பதில் பெரும் பங்காற்றினார். தனது இறுதி மூச்சு வரை தொழி லாளர்களுக்காகவும், குடியிருப்பு பகுதியில் நிலவும் மக்கள் பிரச்சனைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தவர். அவரது உடலுக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ஜெயராமன், எஸ்.பாக்கியலட்சுமி, பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல், கட்டுமான சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.லூர்துசாமி உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் புதனன்று மாலை திருவொற்றி யூரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.