சென்னை, ஜன. 7 - தொழிலாளர்களின் மதிப்பு மிக்க தலைவராக இருந்தவர் கி.தமிழ்ச்செல்வன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் புகழாரம் சூட்டினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு உறுப்பினர், சிஐடியு மாவட்ட துணைச்செயலாளர், சென்னை மகாநகர மோட்டார் வாகன தொழி லாளர் சங்கத்தின் செயல் தலைவராக செயல்பட்டவர் தோழர் கி.தமிழ்ச்செல்வன். உடல் நலக் குறைவாக டிச.1 அன்று கால மானார். அவரது படத்திறப்பு மற்றும் குடும்ப நிதி யளிப்பு கூட்டம் சனிக்கிழமையன்று (டிச.6) தரமணியில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு சார்பில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில், கி.தமிழ்ச்செல்வன் குடும்பத்திற்கு ரூ.2.50 லட்சம் நிதி வழங்கி ஜி.ராம கிருஷ்ணன் பேசியதாவது: வெண்மணி படுகொலை நிகழ்ந்த போது அதற்கான முதல் கண்டன கூட்டம் நடை பெற்ற திருவாரூர் மாவட்டம், கச்சனம் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். சென்னைக்கு வந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் முன்னணி தலைவராக இருந்து, அரசியல் வேறுபாட்டால் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தார். முன்னோடிகளின் அர்ப்பணிப்பு, தியாகத் தால் சிஐடியு வலுவாக இருக்கிறது. அத்த கைய முன்னோடி தலைவர்களில் ஒருவர் தமிழ்ச்செல்வன். அரசியல், தத்துவார்த்த ரீதியாக வளர்ந்த அவர்,
ஆட்டோ ஓட்டு நர்கள் காவல்துறையால் பாதிக்கப்படும் போது, ஆக்ரோஷமாக எதிர்கொள்வார். தொழிலாளர்களுக்காக நேரம் காலம் பார்க்காமல் அர்ப்பணிப்புடன் தொழிற்சங்க பணியாற்றுவார். ஆளுமை மிக்கவராகவும், தொழிலாளர்களின் மதிப்புமிக்க தலை வராகவும் அவர் இருந்தார். மார்க்சிய தத்து வம்தான் அவருக்கு அந்த உணர்வை ஊட்டி யது. தோழர் தமிழ்ச்செல்வன் தொழிற்சங் கத்தை கட்டியமையத்து பாதுகாத்ததை போன்று, கூடுதல் ஒற்றுமையோடு, வலிமை யோடு சங்கம் செயல்பட வேண்டும், பலப்ப டுத்த வேண்டும். தமிழ்ச்செல்வன் குடும்பத் திற்கு ஆதரவாக கட்சி இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்விற்கு சிபிஎம் வேளச்சேரி பகுதிச் செயாலாளர் எஸ்.முகமது ரஃபி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பி னர்கள் க.பீம்ராவ், கே.வனஜகுமாரி, பகுதிக் குழு உறுப்பினர் கோபால், கிளைச் செய லாளர் எம்.வெள்ளைமுத்து, சிஐடியு மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன், மூத்த தலைவர்கள் எஸ்.குமாரதாசன், பொன்.வேலு உள்ளிட்டோர் பேசினர். குடும்ப நிதி டைடல் பார்க் நிறுத்த ஆட்டோ ஓட்டுநர் சுபாஷ் அண்மையில் கால மானார். அவரது இரண்டு பெண் குழந்தை களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் நிறுத்தம் சார்பில் அஞ்சலக வைப்பு நிதி வைக்கப்பட்டது. அதற்கான ஆவ ணங்களை குடும்பத்தாரிடம் ஜி.ராம கிருஷ்ணன் வழங்கினார்.