சென்னை, ஜூன் 4 -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் துறைமுகம் பகுதி, வியாபாரிகள் அரங்க டி கிளை உறுப்பி னரும், மதுரவாயல் பகுதி சிடிஎன் நகர் கிளை உறுப்பினர் ஆனந்த ராகவனின் தந்தையுமான தோழர் அடைக்கலராஜ் வெள்ளியன்று (ஜூன் 2) காலமானார். அவருக்கு வயது 70.
நெற்குன்றத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலா ளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர் இரா.முரளி, மதுரவாயல் பகுதிச் செய லாளர் வி.தாமஸ், வட்டச் செயலாளர் வெங்கடேசன் சென்னை மாநகர சிறுகடை வியாபாரிகள் சங்க கூட்ட மைப்பு பொதுச்செயலாளர் எம்.வி.கிருஷ்ணன், 148வது வார்டு கவுன்சிலர் கிரிதரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து அன்னாரது உடல் சனிக்கிழ மையன்று (ஜூன் 3) விருகம் பாக்கம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.