districts

மகளிர் உரிமை தொகை திட்டம் சிறப்பு முகாம் நிறைவு

சென்னை, ஆக.20-

     பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதற்கான பணிகள் வேக மெடுத்துள்ளது. இரண்டு கட்டங்களாக நடைபெற்ற முகாம்களில் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யாதவர்களுக்கு காக சிறப்பு முகாம்கள் ஆகஸ்ட் 18, 19, 20 ஆகிய மூன்று தேதிகளில் நடை பெறும் என அறிவிக்கப் பட்டது.

     மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக இது வரை 1.54 கோடி பெண்க ளின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் ஏற்கப் பட்டதா, நிராகரிக்கப்பட்டது என்பது குறித்த விவரம், கைபேசி குறுஞ்செய்தி மூலம் விண்ணப்பதா ரர்களுக்கு அனுப்பப்படும். ஆகஸ்ட் இறுதிக்குள் பரி சீலனை செய்ய அரசு திட்ட மிட்டுள்ளது.