districts

img

சென்னையில் முழு வெற்றி!

சென்னை, மார்ச் 28 - ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள் கைகளை கண்டித்து தொடங்கிய வேலை நிறுத்தப் போராட்டத்தை யொட்டி சென்னையில் 12 மையங்க ளில் மறியல் போராட்டமும், ஒன்றிய -மாநில அரசு ஊழியர் சங்கங்கள், எல்ஐசி, வங்கி உள்ளிட்ட பொதுத்துறை ஊழியர் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.
மத்திய சென்னை
அண்ணா சாலை தலைமை தபால்  நிலையம் முன்பு அனைத்து சங்கங்கள் சார்பில் நடைபெற்ற மறியல்  போராட்டத்தில் கி.நடராஜன் (தொமுச), கே.திருச்செல்வன், கே.ஆறுமுக  நயினார், எம்.சந்திரன், சி.திருவேட்டை, தி.ஜெய்சங்கர், எஸ்.ராஜேந்திரன் (சிஐடியு) உள்ளிட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தென்சென்னை
கிண்டி அஞ்சலகம் முன்பு நடை பெற்ற மறியல் போராட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் பா.பால கிருஷ்ணன் தலைமை தாங்கினர். சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், துணைத் தலைவர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டத் தலைவர் இ.பொன்முடி, பொருளாளர் ஏ.பழனி மற்றும் அழகேசன் (ஏஐடி யுசி), ஆல்பின் (ஐஎன்டியுசி), ரங்கசாமி  (ஐக்கிய விவசாயிகள் சங்கம்), கணேசன் (ஏஐயுடியுசி) உள்ளிட்ட 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
வடசென்னை
வட சென்னையில் 10 மையங்களில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர். திரு வொற்றியூரில் சிஐடியு மாவட்டச் செய லாளர் ஆர்.ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் குப்பன் (ஏஐடியுசி), சடையாண்டி (ஏஐயுடியுசி), யுவராஜ் (தொமுச) எம்.ஆர்.எப். எம்ளாயிஸ் யூனியன் செயலா ளர் சுரேஷ், எம்.ஆர்.எப். சீரமைப்பு ஒருங்கிணைப்பாளர் சேகர். எண்ணூர் பவுண்டரி சங்கத்தின் செயலாளர்  தனுஷ்கோடி, ருக்மணி, மணிமாலை (அங்கன்வாடி ஊழியர் சங்கம்). திரு வொற்றியூர் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் கே.ஆர்.முத்து சாமி, சதீஷ் (புதிய ஜனநாயக தொழி லாளர் முன்னணி), ஸ்ரீதர் (தமிழ்நாடு மீனவர் சங்கம்), கதிர்வேல் (சிபிஎம்) உள்ளிட்ட 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அம்பத்தூரில் சு.லெனின்சுந்தர் தலைமையில் நடைபெற்ற மறியலில் கே.ரவிச்சந்திரன், நிர்மலா (சிஐடியு), ஏ.எஸ்.கன்னண், மாரி யப்பன் (ஏஐடியுசி), ஸ்டீபன் மதன்,  (ஐஎன்டியுசி), ராஜ்குமார் (தொமுச), கோபி (சிபிஎம்) உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  ஆவடியில் ம.பூபாலன் (சிஐடியு) தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கவுன்சிலர் ஏ.ஜான் (சிபிஎம்), நாகூர் கனி (தொமுச), ஆதவன் (எல்.எல்.எப்), மயில்வாகனன் (ஏஐடியுசி), கெங்காதுரை (மலைவாழ் மக்கள் சங்கம்), முருகன் (ஆட்டோ), ராம மூர்த்தி (கட்டுமானம்) உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ராயபுரத்தில் ஜெயகோபால் (சிஐடியு) தலைமையில் நடைபெற்ற மறியலில் பவானி (மாதர் சங்கம்), கார்த் தீஷ்குமார் (சிபிஎம்) உள்ளிட்ட 300க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மணலியில் பி.என்.உண்ணி தலைமை யில் நடைபெற்ற மறியலில் ராணி, பாபு (சிபிஎம்) உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மாதவரத்தில் பி.லூர்துசாமி (சிஐடியு) தலைமையில் நடைபெற்ற மறியலில் ரவிக்குமார் (சிஐடியு), வி.கமலநாதன், வி.ஆனந்தன் (சிபிஎம்) உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கொளத்தூர் வி.குப்புசாமி (சிஐடியு) தலைமையில் நடந்த மறியலில் கோட்டீஸ்வரன் (சிஐடியு), பா.ஹேமாவதி (சிபிஎம்), பி.ஆர்.சாமி (கால்டாக்சி), ஜானகிராமன் (இருசக்கர வாகன பழுதுபார்ப்போர் கூட்டமைப்பு), வெற்றி (உரிமைக் குரல் ஓட்டுநர் சங்கம்), பன்னீர்செல்வம் (மணல் லாரி உரிமையாளர் சங்கம்) உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பெரம்பூரில் எஸ்.கே.மகேந்திரன் (சிஐடியு) தலைமையில் நடைபெற்ற மறியலில் பாக்கியலட்சுமி, சுசிலா, லெனின் பானு (அங்கன்வாடி ஊழியர்  சங்கம்) ஆர்.விஜயகுமார் (சிபிஎம்) உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருவிக நகர்  சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் வி.குமார் தலைமையில் நடைபெற்ற மறியலில் வி.செல்வராஜ் (சிபிஎம்), பூங்குழலி (மாதர் சங்கம்), சுரேஷ் (வாலிபர் சங்கம்), ஆர்.சூசை மேரி (அமைப்புசாரா) உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர். ஆர்.கே.நகர் ஆர்.லோகநாதன் (சிஐடியு) தலைமையில் நடை பெற்ற சரவண தமிழன் (வாலிபர் சங்கம்)  தீபா, விமலா எம்சி(சிபிஎம்) உள்ளிட்ட 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

எல்ஐசி
அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு பகுதி 1 தலைவர் ஜி.ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் எஸ்.ரமேஷ்குமார், செந்தில்குமார், ராஜேந்திரன் (முகவர் சங்கம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.