districts

img

அருந்ததியர் சுடுகாடு ஆக்கிரமிப்பு புவனகிரி வட்டாட்சியரிடம் புகார்

சிதம்பரம், செப்.13- கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டத்திற்கு உட்பட்ட ஜெயங்கொண்டம் கிராமத்தில் அருந்ததியர் மக்கள் 150 ஆண்டுகளுக்கு மேலாக  பயன்படுத்தி வரும் மயானத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள் மனு கொடுத்தனர். அந்த மனுயில், எரி கொட்டகை, சாலை வசதி, வாய்க்காலை கடந்து செல்ல சிறிய பாலம் அமைத்து தர வேண்டும் வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். முன்னணியின் மாவட்டக் குழு உறுப்பி னர் சேகர் தலைமையில் மாவட்ட தலைவர் ராஜேஷ் கண்ணன், மாநிலச் செயலாளர் வாஞ்சிநாதன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின், ஒன்றிய குழு உறுப்பினர் சதானந்தம், மாவட்டக் குழு உறுப்பினர் திருமுருகன், பாண்டியன் மற்றும் கிராம நிர்வாகிகள் ராஜூ முருகேசன் வெற்றி சித்ரா பிரவீன், சிவராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உடனடியாக நடவடிக்கை எடுக்க வில்லை என்றால், இம்மாதம் 30 ஆம் தேதி, தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக போராடிய தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தினத்தில் நேரடியாக களம் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் தலைவர்கள் எச்சரித்தனர்.