திருவண்ணாமலை, டிச.1 – திருவண்ணாமலை மாவட்ட விளையாட் டரங்கில் பார்வை திறன் பாதிக்கப்பட்டவர்களு க்கான விளையாட்டு போட்டி களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் து.கணேச மூர்த்தி துவக்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) தலைமை தாங்கினார். உடற்கல்வி ஆய்வாளர் ஜெ.சின்னப்பன் வரவேற் றார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் து.கணேச மூர்த்தி மாற்றுத்திறனாளி களுக்கான விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார். பார்வை குறைபாடு, காதுகேளாமை, அறிவுத் திறன் குறைபாடு, உடல் ஊனமுற்றோர் குழந்தைகள் உள்ளிட்ட பல்வேறு வகை யான பார்வை திறன் பாதிக் கப்பட்டவர்க ளுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன. 100 மீட்டர் ஓட்டப் போட்டி நீளம் தாண்டுதல் குண்டு எறிதல் உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு விளை யாட்டு போட்டிகளில் 14, 17, 19 ஆகிய வயதுடைய 250க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாண வர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் வெற்றி பெற்ற பார்வை திறன் பாதிக்க பட்டவர்க ளுக்கு பரிசுகள் வழங்கப் பட உள்ளன. இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், இயன்முறை மருத்துவர்கள் அரசு அலுவலர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஒருங் கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட ஒருங்கிணைப் பாளர் ஏ.சங்கர் நன்றி கூறினார்.