சென்னை, செப். 10 - டாக்டர் கே.கே.அறுவை சிகிச்சை மற்றும் குழந்தைகள் மருத்துவ மனையில் கட்டணமில்லா புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு தொடங் கப்பட்டுள்ளது. மேற்கு தாம்பரம் காந்தி சாலை யில் புதுப்பிக்கப்பட்ட டாக்டர் கே.கே. அறுவை சிகிச்சை மற்றும் குழந்தை கள் மையம் விழா ஞாயிறன்று (செப். 10) நடைபெற்றது. மருத்துவமனை யையும், கண்மணி அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புற நோயாளிகளுக்கான கட்டணமில்லா சிகிச்சை பிரிவையும் மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதா கிருஷ்ணன் திறந்து வைத்தார். கண்மணி விழிஒளி மையத்தை தாம்பரம் மாநகராட்சி மேயர் கே.வசந்த குமாரி திறந்து வைத்தார். அப்போது பேசிய ஜெ.ராதா கிருஷ்ணன், “மருத்துவத்தில் எவ்வளவு முன்னேற்றம் வந்தாலும் சவால்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. எனவேதான்,
சேவைகள் அதிகம் தேவை. தமிழக த்தில் ஒரு நாளைக்கு 6 லட்சம் புறநோயாளிகள் பயனடைகின்றனர். எனவே தனியார் மருத்துவ மனைகளும் தேவையாக உள்ளது. அதன்காரணமாகவே முதலமைச் சரின் காப்பீடு திட்டத்தில் தனியார் மருத்துவமனைகளும் இணைக்கப் பட்டுள்ளன. இந்த மருத்துவமனையில் என்னென்ன சேவைகள் உள்ளது என்பதை வெளிப்படையாக அறிவிப்பு பலகையில் வைத்திருப்பது பாராட்டுக் குரியது. சுகாதாரம், கண் மருத்துவ மும் அரசின் இரண்டு கண்களாக அரசு கருதுகிறது. அடுத்து டெங்கு பரவும் காலகட்டம். அதை எதிர்கொள்ள வேண்டும்” என்றார். நிகழ்வில் பேசிய குழந்தை அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் எஸ். காசி, கண் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் கே.கவிதா லட்சுமி ஆகியோர் கூறுகையில், “புறநோயா ளிகளுக்கு கட்டணமின்றி இலவச சிகிச்சை அளிக்கப்படும். கட்டண மின்றி, மிகக்குறைந்த செலவில் அதி நவீன கண் சிகிச்சைகள், அறுவை சிகி ச்சைகளை மேற்கொள்ள உள்ளோம்” என்று தெரிவித்தனர். மருத்துவமனை திறப்பு விழா விற்கு விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா காணொளி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார். ரூபி மனோகரன் எம்எல்ஏ, மருத்துவர் சேஷ கிரி, இந்திய மருத்துவ சங்கத்தின் தாம்பரம் தலைவர் மருத்துவர் உரிமை யாளர் முருகேசன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல் முருகன், தொழிற்சங்க தலைவர் க.பீம்ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.