கூவம் ஆற்றில் மீண்டும் பாலம் அமைக்கும் பணி துவக்கம்
திருவள்ளூர், பிப்.18- திருவள்ளூர் அருகே கொண்டஞ் சேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது சத்தரை ஊராட்சி. இப்பகுதியில் கூவம் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. இந்த பாலத்தை பயன்படுத்தி கொண்டஞ்சேரி, மப்பேடு வழியாக 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரம், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், தண்டலம், அரக்கோணம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வரு கின்றனர். வாகன போக்குவரத்திற்கு முக்கிய தரைப்பால மாகவும் உள்ளது. மழை வெள்ளம் காரண மாக இந்த தரைப் பாலம் கடந்த 2016, 2021,2022 ஆகிய ஆண்டு களில் மூன்று முறை சேத மடைந்தது.பின்னர், தரைப்பாலம் சீரமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையின் போதும் கூவம் ஆற்றின் குறுக்கே இருந்தரைப்பாலம் 4-வது முறையாக சேதமடைந்தது. இதனால் இவ்வழியே அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஏற்கெனவே தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலம் புதிய மேம்பாலம் கட்ட ரூ. 20 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதில் இதுவரை முடிவு செய்யப்பட வில்லை. இந்த நிலையில் பொதுமக்கள் வேண்டு கோளின்படி அவசர தேவை பயன்பாட்டிற்காக கூவம் ஆற்றில் தற்போது 4 -வது முறையாக சேத மடைந்த பகுதிகளை சீரமைத்து தற்காலிக பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து கிராம மக்கள் கூறும்போது, தரைப்பாலம் சேதம் அடையும் போது தற்காலிகமாக சீரமைக்கப் படுவதாக கூறினர்.
3 ஆண்டுகளுக்குள் 60,567 பேருக்கு பணி: அரசு விளக்கம்
சென்னை,பிப்.18- தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் 60,567 நபர்களுக்கு அரசு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசு செய்திக் குறிப்பில், “சென்னையில் பிப்.16 அன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில், தமிழ்நாட்டில் இந்த அரசு பொறுப்பேற்ற அதிலிருந்து கடந்த மாதம் வரை 60,567 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப் பட்ட விவரத்தை முதல்வர் குறிப்பிட்டார். இது குறித்து சில ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களுக்கு பின்வரும் விவரங்கள் தெரிவிக்கப்படுகின்றது. தமிழ்நாட்டில், அரசுப் பணிக்கான பணியாளர்களை தேர்வு செய்வதற்காக உள்ள தேர்வு முகமைகளான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆகியவற்றின் மூலம், கடந்த இரண்டரை ஆண்டுகளில் வெவ்வேறு அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான, ஜனவரி 2024 வரை, 27,858 அரசுப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது தவிர, பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக, ஜனவரி 2024 வரை 32,709 நபர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். துறைவாரியான நியமனங்களை பொறுத்தவரை நீதித்துறையில் 5,981 பணியிடங்களும், பள்ளிக் கல்வியில் 1,847 பணியிடங்களும், வருவாய்த் துறையில் 2,996 பணி யிடங்களும், சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை யில் 4,286 பணியிடங்களும், ஊரக வளர்ச்சித் துறையில் 857 பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. அதேபோல் உயர் கல்வித் துறையில் 1,300 பணி யிடங்கள், காவல்துறை, நகராட்சி நிர்வாகம், வேளாண்மை, சமூக நலம் மற்றும் சத்துணவு போன்ற அரசின் பிற துறைகளின் வாயிலாக 15,442 பணி யிடங்களும் அந்தந்தத் துறைகளின் வழக்கமான நடை முறைகளைப் பின்பற்றி நேரடியாக நிரப்பப்பட்டன. இவ்வகையில் 32,709 இளைஞர் களுக்கு பணி நிய மனங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம், இந்த அரசு பொறுப்பேற்ற இந்த மூன்று ஆண்டு காலத்திற்குள் 60,567 நபர்களுக்கு அரசுப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமன்றி, தமிழ்நாட்டில் படித்த இளைஞர்க ளுக்கு பல்லாயிரக்கணக்கில் வேலை வாய்ப்பை உருவாக்கி உலக முதலீட்டாளர்களும் நடத்தப்பட்டது. இம்மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக நம் மாநிலத்தின் இளைஞர்களுக்கு இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்க தமிழ் நாடு அரசு வழிவகை செய்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். ஆனால், ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் குறைவாக 24,879 பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்பட்டிருக்கிறது. ஒப்பீட்டளவில் தமிழ்நாடு அரசு பொறுப்பேற்ற போது இருந்ததை விட இப்போது அரசு பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில் அரசுத் தரப்பில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சிந்தனை சிற்பியின் சிலைக்கு தலைவர்கள் மரியாதை
கடலூர், பிப்.18- சிந்தனை சிற்பி சிங்காரவேலர் சிலைக்கு கடலூரில் சிபிஎம், சிஐடியு, மீன்பிடி தொழிலாளர் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் 1923இல் மே தின பேரணி நடத்தியவர். 1925 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாட்டை தலைமையேற்று நடத்தியவர் சிந்தனை சிற்பி தோழர் ம.சிங்காரவேலர். அவரது 165 வது பிறந்த தினம் ஞாயிற்றுக்கிழமை (பிப்.18) கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கடலூர் சிபிஎம் அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத் தலைமையில் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் மாலை அணிவித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெ. ராஜேஷ் கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.ஆளவந்தார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல் சிஐடியு, மீன்பிடி தொழிலாளர் சங்கத்தினர் சிங்கார வேலர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.பழனிவேல், தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் எழுத்தாளர் சங்க மாவட்டச் செயலாளர் பால்கி, தமிழ்நாடு மீன்பிடி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஏழுமலை, தலைவர் வைத்திலிங்கம், நிர்வாகிகள் ஸ்டாலின், மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.