சென்னை ஆர்.கே.நகரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடத்தப்பட்டு வரும் தோழர் சந்திரன் கல்வி மையத்தின் 6ஆம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதில் மார்க்சிய சிந்தனையாளர் பா.வீரமணி, வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.பி.சரவணத்தமிழன், 41ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பா.விமலா, எம்.வி.கிருஷ்ணன் (வியாபாரிகள் சங்கம்), சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.லோகநாதன், பகுதிச் செயலாளர் வெ.ரவிக்குமார், மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் காவ்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தோழர் சந்திரன் மகன் சரவணன் கல்வி மைய வளர்ச்சிக்காக ரூ.10,000 வழங்கினார்.