districts

img

நினைவு கல்வெட்டு திறப்பு விழா

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் முன்னாள் தலைவர் எஸ்.பஞ்சரத்தினம் நினைவு கல்வெட்டு திறப்பு விழா திருவள்ளூர் அருகே மணவாளநகர் பிரிவு அலுவலகத்தில் கோட்டச் செயலாளர் சி.சம்பத் தலைமையில் நடைபெற்றது. மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் கல்வெட்டை திறந்து வைத்தார். சங்க கொடியை வடக்கு மண்டலச் செயலாளர். இரா.ரவிக்குமார் ஏற்றினார். சங்கத்தின் பெயர் பலகையை திட்டத்தின் செயலாளர் முத்து திறந்து வைத்தார். இதில் சிஐடியு திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், கோட்டத் தலைவர் அப்போஸ்தலர், சங்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் நிர்மல் பள்ளிக்கு நிதி வழங்கப்பட்டது.