மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியரும் வீதி நாடக கலைஞருமான தோழர் வீ.கலாவதியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி வீர அருண் குடும்பத்தார் சார்பில் புதனன்று (ஏப் 5) எண்ணூர் 1ஆவது வட்டத்தில் நடைபெற்றது. “ தோழர் அம்மா” நூலை அவரது சகோதரர் ராஜசேகரன் வெளியிட மாதர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் வி.அம்சா, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் இரா.சிந்தன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். மத்திய சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.முரளி, தமுஎகச மாநில துணைச் செயலாளர் கி.அன்பரசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.