மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர் தோழர் வி.பி.சிந்தன் நினைவு தினம் புதனன்று (மே 8) அனுசரிக்கப்பட்டது. இதன் ஒருபகுதியாக கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு அலுவலகத்தில் அவரது படத்திற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் சு.வெள்ளைச்சாமி, ச.லெனின், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.ரெங்கசாமி, எம்.தாமு, சி.செங்கல்வராயன், இ.ரவி, தீ.சந்துரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.