கிருஷ்ணகிரி, ஆக.1-
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு விடுதி வசதி செய்து தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த னர்.
வாணியம்பாடி, ஆம்பூர் சுற்றுவட்டார பகுதி களில் இருந்தும், பீம குளம், நாயக்கனூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி வட்டங்களில் பனைமரி யாலம் ,கோட்டை யூர், ஜவளகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பட்டியல் இன மற்றும் மிகவும் பிற்படுத்தப் பட்டோர் வகுப்பை சேர்ந்த முதல் தலைமுறையினர் கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.
60 கிலோ மீட்டர் முதல் 100 கிலோ மீட்டர் வரை தினமும் பேருந்தில் பயணம் செய்து கல்லூ ரிக்கு வரவேண்டும். பொரு ளாதார ரீதியாக இது சாத்தியமற்றதாக உள்ளது. மேலும் பயண நேரம் அதி கரிக்கிறது. அதனால், தினசரி மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, விடுதி வசதி செய்து தர வேண்டும் என்று மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர். ஆனால், அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், பாதிக்கப்படும் இரண்டா வது முறையாக ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.