ஆட்சியர்கள் பத்திரிகைகளை படிக்க வேண்டும்: முதல்வர் அறிவுறுத்தல்
செங்கல்பட்டு, அக்.18- மாவட்ட ஆட்சியர்கள் தினமும் காலை யில் பத்திரிகைகளை படிக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் புதனன்று (அக் 18) செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர், மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தின் கூட்டரங்கில், “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில், முதல்வர் பேசியது வருமாறு:- மாவட்ட ஆட்சியர்கள் தினமும் காலை பத்திரிகைகளை படிக்க வேண்டும். ஊடக செய்திகளை பார்க்க வேண்டும். அப்படி பார்த்தால்தான், என்ன நாட்டில் நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். குறிப்பாக உங்கள் மாவட்டத்தில் என்ன பிரச்சனை? என்பதை நீங்கள் உடனடியாக புரிந்து கொள்ள முடியும். அப்படி உங்கள் மாவட்டங்களைப் பற்றி ஏதாவது செய்திகள் வந்தால், அந்த செய்திகளுக்கு உடனே பரிகாரம் காண வேண்டும். பரிகாரம் காண்பது மட்டுமல்ல, அது எந்த வகையில் பரிகாரம் காணப் பட்டிருக்கின்றது என்பதை ஊடகங்க ளுக்கும் பத்திரிகைகளுக்கும் நீங்கள் தெரியப்படுத்த வேண்டும். அதை காலை முதல் பணியாக வைத்துக் கொள்ள வேண்டும். அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக விளங்கும், அரசின் திட்டங்களை, சேவை களை அவர்களிடம் கொண்டு சேர்க்கும் உன்னத பணியை தொடர்ந்து சிறப்பாக மேற்கொண்டு, அரசுக்கும் உங்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும் நல்ல பெயரை ஈட்டித் தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பேசினார்.
மெட்ரோ ரயில் கட்டணத்தை விட பார்க்கிங் கட்டணம் அதிகம்
சென்னை,அக்.18- சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகள் தங்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்தி விட்டு ரயில்களில் பயணம் செய்கிறார்கள். மால்களில் பார்க்கிங் கட்டணம் மூலம் பெரும் தொகையை வாடிக்கை யாளர்களிடம் சுருட்டுகின்ற னர். மெட்ரோ ரயில் நிர்வா கம் பார்க்கிங் கட்டணத்தை டிக்கெட் கட்டணத்தை விட அதிகமாக்கி நேர கணக்கின் அடிப்படையில் கட்டணங் களை வசூலிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. முன்பு 12 மணி நேரத்துக்கு இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.15-ம், கார்களுக்கு ரூ.50-ம் வசூலிக்கப்பட்டது. இப்போது அந்த கட்ட ணத்தை ரூ.30 ஆகவும் ரூ.100 ஆகவும் உயர்த்தி விட்டது. இது தவிர இரவு கட்டணம் இரு மடங்கு,4 மணி நேரத்திற்கு ஒரு கட்டணம், 8 மணி நேரத்துக்கு ஒரு கட்டணம் என்று வசூலிக்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு நிலையத்தில் ஒவ்வொரு விதமான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயணிகள் வருகை மனதில் கொண்டு தனியார்களை போல் அரசு நிறுவனங்கள் சேவையை மறந்து லாப நோக்கோடு செயல்படுவது பயணிகள் அதிருப்தி அடைய வைத்துள்ளது. ரூ.50 முதல் ரூ.100 வரை கட்டணம் கொடுத்து இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு ரூ.30 கட்டணத்தில் ரயிலில் பயணிக்க முடிகி றது. மெட்ரோ ரயில் நிர்வா கம் பார்க்கிங் கட்டணத்தை குறைத்து ஒரே சீராக நிர்ணயிக்காவிட்டால் மெட்ரோ ரயிலுக்கு விடை கொடுத்து விட்டு இரு சக்கர வாகனத்தை ஸ்டார்ட்’ செய்து விடுவார்கள். சென் னையின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்ற நோக்கம் நிறைவேறாமல் போகும்.
ஒழுக்கக்கேடாக நடந்துகொள்ளும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திடுக
ஆட்சியருக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்
திருவள்ளூர், அக் 18- பள்ளியில் ஒழுக்க கேடாக நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் மீது, மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் வலியுறுத்தியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், பூண்டி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 450 கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 24 ஆசிரி யர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த கல்வி யாண்டில் 95 விழுக்காடு மாண வர்கள் தேர்ச்சி பெற்று சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. பூண்டி நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள இந்த பள்ளியின் நற்பெயரை கெடுக்கும் வகையில் வேதியல் பாட ஆசிரியர், சக ஆசிரியையிடம் ஒழுக்க கேடாக நடந்து கொள்வ தாக கூறப்படுகிறது. வகுப்பறையி லேயே இருந்து கொண்டு அடிக்கடி செல்போனில் பேசுவது வழக்கமாக கொண்டுள்ளனர்.இதனால் பாடம் சரிவர எடுப்பதில்லை என்கிறார்கள். ஒழுக்க கேடாக நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வரும் கல்வி யாண்டில் தேர்ச்சி விகிதம் வெகு வாக குறைய வாய்ப்புள்ளது. குறிப்பாக மாணவர்களே ஒழுக்க கேடாக மாறும் முன்பு குற்றச்சாட்டு எழுந்துள்ள ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே நிலை நீடித்தால் மாணவர்க ளின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாற்றும் அபாயம் உள்ளது என்கி றார்கள். பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் ஸ்ரீதர் மற்றும் நிர்வாகி களும் வேதியியல் பாட ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருவள்ளூரில் உள்ள முதன்மை கல்வி அதிகாரி யிடம் மனு அளித்துள்ளனர். மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய ஒரு சில ஆசிரியர்க ளின் மோசமான நடத்தையால், ஒட்டுமொத்த மாணவ சமுதாய மும் பாதிக்கும் நிலை உள்ளது. இதில் மாவட்ட ஆட்சியர் விசா ரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள் ளூர் வட்டச் செயலாளர் ஆர்.தமிழ் அரசு வலியுறுத்தியுள்ளார்.
முறையாக பதிவு செய்யப்படாத மகளிர் விடுதிகள் மீது நடவடிக்கை
சென்னை,அக்.18- சென்னையில் முறையாக பதிவு செய்யப்படாத தனியார் மகளிர் விடுதி நிர்வாகிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்கள் ஆகியவை தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் ஒழுங்குமுறை சட்டம் 2014 மற்றும் விதிகள் 2015-ன் கீழ் பதிவு செய்யப் பட்டிருக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படாத விடுதிகள் பதிவு செய்வதற்கு https://tnswp.com என்ற ஆன்லைன் போர்ட்டல் மூலமாக பதிவு செய்யலாம். அதன்படி அறக்கட்டளை பதிவு பத்திரம், சொந்த கட்டிடம்/வாடகை ஒப்பந்த பத்திரம், கட்டிட வரைபடம், கட்டிட உறுதிச் சான்று, தீயணைப்பு துறையின் தடையில்லா சான்று மற்றும் சுகாதாரச்சான்று ஆகிய ஆவணங்களுடன் மேற்கண்ட ஆன்லைன் போர்ட்ட லில் வருகிற 30-ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு முறையாக பதிவு செய்யப்படாத தனியார் விடுதி மற்றும் இல்ல நிர்வாகிகள் மீது சட்டப்படி காவல்துறையின் மூலமாக வழக்குப்பதிவு செய்து அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.50ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என ஆட்சியர் தெரிவித் துள்ளார்.
ஏரியில் கழிவுநீர் கொட்டிய லாரி பறிமுதல்
சென்னை, அக்.18- பெரும்பாக்கம் ஏரியில், கழிவுநீர் கொட்டிய கழிவுநீர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. மேடவாக்கம் மற்றும் சித்தாலப்பாக்கம் பகுதிகளில் ஏராளமான வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளன. இங்கு இருந்து கழிவுநீர் லாரிகள் மூலம் எடுக்கப்படும் கழிவு நீரை சில கழிவுநீர் லாரி உரிமையாளர்கள், பெரும்பாக்கம் ஏரியில் சட்டவிரோதமாக வருவதாக பெரும்பாக்கம் காவல்துறை யினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, காவலர்கள் பெரும்பாக்கம் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில், திங்களன்று(அக்.16) இரவு பெரும்பாக்கம் ஏரியை ஒட்டி உள்ள சாலையில் சென்ற கழிவுநீர் லாரியின் முகப்பு விளக்குகள் திடீரென அணைக்கப்பட்டன. இதனால், சந்தேகமடைந்த ரோந்து காவலர்கள் லாரியின் அருகே சென்று சோதித்தனர். அப்போது கழிவு நீரை ஏரியில் திறந்து விட்டது தெரிய வந்தது. இதையடுத்து, கழிவுநீர் லாரியை பறிமுதல் செய்து விசாரித்தனர். அதில் கழிவு லாரியின் உரிமையாளர் மேடவாக்கத்தை சேர்ந்த தேவராஜ் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக, தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
கோயம்பேட்டில் 10 நாட்கள் சிறப்பு சந்தை
சென்னை,அக்.18- சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஆண்டு தோறும் மக்களுக்கு பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும். கோயம்பேடு மலர் அங்காடி வளாகத்தில் இந்த சிறப்பு சந்தை திறக்கப்படுவது வழக்கம். இந்த சந்தை, கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகம் மூலம் ஏலம் விடப்பட்டு, ஒப்பந்ததாரர் மூலம் நடத்தப்படும். தற்போது கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் இந்த முறை சிறப்பு சந்தை நடத்துவ தற்காக ஏலம் விடப்பட வில்லை. கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகம் நேரடியாக சிறப்பு சந்தை நடக்கிறது.அதன்படி கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள மலர் அங்காடி வளாகத்தில் ஆயுத பூஜையையொட்டி சிறப்பு சந்தை புதனன்று தொடங்கியது. இந்த சிறப்பு சந்தை வருகிற 27 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு செயல்படும்.
அவதூறு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஆஜராக உத்தரவு
விழுப்புரம், அக்.18- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும், தமிழ்நாடு அரசையும் அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நவம்பர் 17-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டார். விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தில் கடந்த மே 1 ஆம் தேதி அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு அரசையும் அவர் அவதூறாக பேசினார். இதுகுறித்து விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் டி.எஸ்.சுப்பிரமணியன் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரணையில் அடுத்த விசாரணையை வருகிற நவம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அன்றைய தினம் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று முதன்மை மாவட்ட நீதிபதி ஆ. பூர்ணிமா உத்தரவிட்டார்.
மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ராணிப்பேட்டை, அக்.18 - மழைநீர் சேகரிப்பு குறித்து மாணவர்கள், மகளிர் குழுக்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் காணொலி வாகன பிரச்சாரத்தை புதனன்று (அக். 18) மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி முத்துக்கடை பேருந்து நிறுத்தத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்டம் முழுவதும் நகர்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு குறித்து குறும்படங்கள் மூலம் ஒளிபரப்பும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் காணொலி மின்னணு வாகன பிரச்சாரம் நடைபெறுகிறது இந்நிகழ்ச்சியில் நகரமன்றத் தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம்: துரைமுருகன் பேட்டி
வேலூர், அக்.18 - வேலூர் மாவட்டம், வள்ளி மலை அருகே பொன்னை ஆற்றின் குறுக்கே சுமார் ரூ. 35,000 கோடியில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளை அமைச்சர் துரைமுருகன் புதனன்று (அக்.18) ஆய்வு செய்தார். பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:- பொன்னை ஆற்றின் குறுக்கே சுமார் ரூ. 35 கோடி யில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் விரைவில் முடிக்கப்படும். காட்பாடி புதிய ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். காவிரி-குண்டாறு இணைப்பு தொடர்பாக மாய னூரில் மிகப்பெரிய தடுப் பணையை கட்டியிருக்கிறோம். அந்த தடுப்பனையிலிருந்து தான் தண்ணீர் எடுத்துச் செல்ல வேண்டும். அங்கி ருந்து இரண்டு கால்வாய் வெட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. மூன்றாவது கால்வாயை வெட்டு வதற்கு அடுத்த மாதம் டெண்டர் விடப்படும். இவ்வாறு அவர் தெரி வித்தார்.
மாநகராட்சி கடைகள் மறு ஏலம் விடப்படுவது ஏன்?
தஞ்சை மாமன்றக் கூட்டத்தில் சலசலப்பு
தஞ்சாவூர், அக்.18 - தஞ்சாவூர் சரபோஜி சந்தை உள்ளிட்ட கடைகள், அதிக வாடகை காரணமாக மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்ட கடைகள், ஏற்கெனவே ஏலம் விடப்பட்ட நிலையில், மறு ஏலம் விடப்படுவது ஏன் என உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதால் சலசலப்பு நிலவியது. தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற அவசரக் கூட்டம் மேயர் சண்.ராமநாதன் தலைமையிலும், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் ஆர். மகேஸ்வரி முன்னிலையிலும் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், சரபோஜி சந்தை, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், திருவையாறு வணிக வளாகம் ஆகியவற்றில் அதிக வாடகை காரணமாக மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட கடைகளுக்கு செப்.21அன்று நடைபெற்ற ஏலம் குறித்து முடிவு செய்வது தொடர்பான பொருள் மாமன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டது. மறுநிர்ணயம் ஏன்?: உறுப்பினர்கள் கேள்வி இதுகுறித்து மாமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கையில், “இக்கடைகள் ஏற்கனவே மே 12, ஜூன் 16, ஜூலை 20, ஆகஸ்ட் 24 ஆகிய தேதிகளில் ஏலம் விடப்பட்டபோது, அது தொடர்பான பொருள் மாமன்றக் கூட்டத்தில் வைக்கப்படாததற்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும். இதற்காக அவசரக் கூட்டம் நடத்தப்படுவது தேவையில்லாதது. மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்ட கடைகளில் ஏற்கனவே ஒரு கடைக்கு ரூ.10,500 நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அதே கடைக்கு இப்போது ரூ. 8,100 என வாடகை நிர்ணயம் செய்திருப்பது ஏன்? இதனால், மாநகராட்சி நிர்வாகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படும். ஏற்கெனவே ஏலம் விடப்பட்ட கடைகளை இப்போது மீண்டும் ஏலம் விடுவதற்கான காரணம் என்ன” என்றனர். மேயர் பதில் இதற்கு பதிலளித்த மேயர், ‘ஏற்கனவே நடைபெற்ற ஏலத்தில் 10,500-க்கு எடுக்கப்பட்ட கடை திரும்ப ஒப்படைக்கப்பட்டதால், அதை மறு ஏலத்தில் அதிகபட்ச ஏலத் தொகையாக ரூ. 8,100-க்கு கேட்கப்பட்டுள்ளது. என்றாலும், எந்தக் கடை மூலமாவது வருவாய் இழப்பு ஏற்படுவதாகத் தெரிவித்தால், அதை நிறுத்தி வைக்கத் தயாராக இருக்கிறோம். ஏலத்தில் யார் அதிகமான தொகைக்கு கேட்கின்றனரோ, அவர்களுக்கு வழங்கப்படும்’ என்றார். ஆணையர் மகேஸ்வரி கூறுகையில், ‘ஏற்கனவே மே 12, ஜூன் 16, ஜூலை 20, ஆகஸ்ட் 24 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஏலத்தில் யாரும் பங்கேற்கவில்லை. செப்.21 அன்று நடைபெற்ற ஏலத்தில் கலந்து கொண்டு அதிகபட்ச தொகை கேட்டவர்களுக்கு இறுதி செய்யப்பட்டுள்ளது’ என்றார். இதைத்தொடர்ந்து, மேயருக்கும், மாமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், சலசலப்பு நிலவியது. இந்நிலையில், அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாகவும், கூட்டம் முடிவடைந்து விட்டதாகவும் கூறி மேயர் எழுந்து சென்றார். மேலும், ஒலிபெருக்கிகளும் அணைக்கப்பட்டன. கூட்டத்தை பாதியில் முடித்ததற்கும், ஒலிபெருக்கிகள் அணைக்கப்பட்டதற்கும் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கலைந்து சென்றனர்.