districts

img

சட்டவிரோத குடிநீர் இணைப்பை துண்டிக்க ஆட்சியர் உத்தரவு

காஞ்சிபுரம், மே 8 - காஞ்சிபுரம் மாவட்டம், மாநகராட்சி, நகராட்சி, பேரூ ராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் சட்ட விரோத மாக உள்ள குடிநீர் இணைப்பு களை துண்டித்திட நடவடிக்கை கள் மேற்கொள்ள தெரி விக்கப்பட்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் சட்டவிரோதமாக உள்ள குடிநீர் இணைப்புகளை துண்டிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள தெரி விக்கப்படுகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள முறையற்ற குடிநீர் குழாய் இணைப்புகள் மற்றும் சட்ட விரோதமாக பயன்படுத்தப்படும் மின் மோட்டார் இணைப்புகள் பயன்படுத்தப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் துண்டித்து பறிமுதல் செய்யப்படும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் தினசரி குடிநீர் வழங்குவதை முறைப்படுத்தும் பொருட்டு வீடுகள், திரு மண மண்டபங்கள் கடை கள் மற்றும் தொழிற்சாலை களில் சட்ட விரோதமாக மின்மோட்டார் இணைப்பு கள் பயன்படுத்தப் பட்டிருந்தால் அதனை துண்டிப்பு செய்து அபராதம் விதிக்கப்படும். கோடைகாலங்களில் வறட்சியினை தவிர்க்கும் பொருட்டு குடிநீர் வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்திட பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு ஆட்சியர் கலைச் செல்வி தெரிவித்துள்ளார்.