districts

img

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரி மீது நடவடிக்கை

செங்கல்பட்டு, ஏப். 20- விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் தொடர்ந்து நான்கு மாதங்களாக  கலந்து கொள்ளாத வனத்துறை அலுவலர் மீது நட வடிக்கை எடுத்திட தலைமை செய லாளருக்கு பரிந்துரை செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவி த்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட விவசாயி கள் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அ.ர.ராகுல்நாத் தலை மையில் ஆட்சியர் அலுவலகத்தில் வியாழனன்று (ஏப்.20) நடைபெற்றது.   இக்கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து கலந்து கொண்ட விவசாயிகள் விவசாய நிலங்களை நாசப்படுத்தி வரும் காட்டு பன்றிகளை  சுட்டுப்பிடிக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும், காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தும் சோலார் மின் வேலிகள்  அமைக்க மானிய விலையில்  சோலார் மின் உபகரணங்களை வழங்க வேண்டும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பெறப்படும் லஞ்சப்பணம்  மூட்டைக்கு ரூ60 பெறுவதை தடுக்க வேண்டும், பாலாற்றில் பன்றிகளின் கூடாரமாக மாறி உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற  நட வடிக்கை எடுக்க வேண்டும், ஏரி வரத்து கால்வாய்களை தூர் வாரி சீரமைக்க வேண்டும்,  வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் வனப்பகுதியில் இருந்து குடிதண்ணீர் தேவைக்காக குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய நிலங்களுக்கு வரும் காட்டு விலங்குகள் மற்றும் பறவை களுக்கு வனப்பகுதியில் குடிநீர் ஏற்பாடுகளை செய்ய வேண்டும், விவசாய நிலங்களுக்கு அருகில் செயல்பட்டு வரும் கல்குவாரிகளை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன் வைத்தனர். இதற்கு பதில் அளித்து பேசிய ஆட்சியர்,  

தொடர்ந்து விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்திற்கு வரும் விவ சாயிகள் கோரிக்கை மனுக்கள் மீது அக்கறை இல்லாமல் செயல்பட்டு வரும்  மாவட்ட வனத்துறை அலு வலர் மீது நடவடிக்கை எடுத்திட வனத்துறை முதன்மை செயலாளருக்கு பரிந்துரை செய்யப்படும், தூர் வாராத ஏரி களை உடனடியாக தூர் வாரிடவும், காட்டு பன்றிகள் குறித்து அரசுக்கு தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,  ஏரி நீர்வரத்து கால்வாய்களை சீர் செய்திடவும் நடவடிக்கை எடுக்கப் படும் என தெரிவித்தார். மேலும் விவசாயிகள் கொடுக்கும் மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளாமல் எந்தவித நட வடிக்கை எடுக்காமல் பதில் தெரி விக்கும்  அரசு அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார். சார் ஆட்சி யர் லட்சுமிபதி, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.மேனுவல் ராஜ், வேளாண்மை இணை இயக்குநர் ஆர்.அசோக், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தமிழ்செல்வி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அ.பாலகிருஷ்ணன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் பா.சந்திரன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் மோகன் உள்ளிட்ட  அரசு அலுவலர்கள்  இதில் பங்கேற்றனர்.