வேலுர், செப். 18- அதிக வீரியம் உடைய மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை யின்றி வழஙகக்கூடாது என்று மருந்து கடைகளுக்கு வேலுர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். மாவட்டத்தில் போதை பொருட்கள் தடுப்பு விழிப்பு ணர்வு குறித்து மாவட்ட வணிகர்களுக்கான கலந்தாய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் வே.இரா. சுப்புலெட்சுமி தலைமையில் புதனன்று (செப்.18) நடை பெற்றது. தமிழ்நாடு முதல மைச்சர், போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில் பல்வேறு அறி வுரைகளையும், ஆலோ சனைகளையும் வழங்கி யுள்ளார். போதைப் பொருட்கள் ஒழிப்பில் மருந்தகங்களின் பங்கு முக்கியமானது. ஒரு சில இடங்களில் மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் போதை பொரு ளாக பயன்படுத்த கூடிய நிகழ்வுகளை பார்க்க முடிகிறது. எனவே இந்த பழக்கத்தில் இருந்து எதிர்கால சந்ததிகளை காக்கக்கூடிய பொறுப்பும் அனைவருக்கும் உண்டு. மருந்தகங்களில் மருத்து வரின் ஆலோசனை இன்றி மாத்திரைகள் வழங்கு வதை முற்றிலும் தடுக்க வேண்டும். குறிப்பாக அதிக டோஸ் உடைய மாத்தி ரைகளை யாரேனும் மருத்து வரின் ஆலோசனையின்றி கேட்டால் அதை வழங்கக் கூடாது. மருந்தகங்களிலும் எந்த வகையான மருந்து மாத்திரைகள் அதிக அளவு விற்பனையாகிறது என்பது குறித்து மருந்து கட்டுப்பாட்டு துறை யின் மூலம் கண்காணிக்கப் படும். எந்த ஒரு மருந்தக மும் தவறான நடைமுறை களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துங்களை வழங்கக் கூடாது. எதிர்கால சந்ததியினரை போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் பாதுகாக்க வேண்டிய நம்முடைய ஒவ்வொருவரின் கட மையை உணர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் மாவட்ட கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன், துணை காவல் கண்காணிப்பளர் திரு நாவுக்கரசு, உதவி இயக்கு நர் நந்தகுமார், மருந்துகள் ஆய்வாளர் மற்றும் வணி கர்கள் கலந்து கொண்டனர்.