districts

img

தனியார் நிலங்களில் வசிப்போரிடம் சொத்து வரி வசூலித்திடுக

சென்னை, செப். 27 - தனியார் நிலங்களில் வசிப்போரிடம் சொத்து வரி வசூலிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. தி.நகர் பகுதி 133வது வட்டம், முத்து ரெட்டி தோட்டம், தனக்கோட்டி யம்மாள் தோட்டம், ராஜூ பிள்ளை தோட்டம் பகுதிகள் உள்ளன. பல ஆண்டுகளாக வசிக்கும் மக்களுக்கு குடிமனைப் பட்டா கிடையாது. எனவே, இந்த மக்களிடம் மாநக ராட்சி சொத்து வரி வசூ லிக்க வேண்டும், பட்டா வழங்க வேண்டும் என வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 133வது வட்ட கிளைகள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இது தொடர்பான மனுவை பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியாவிடம், எம்.சரஸ்வதி எம்.சி., சிபிஎம் தி.நகர் பகுதிக்குழு உறுப்பினர் எம்.குமார், 133 வது வட்ட செயலாளர் என். வேலாயுதம், டி.ரவி ஆகி யோர் புதனன்று (செப்.27) அளித்தனர். அதில்,. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகர மேயராக இருந்த போது ரூ100 திட்டத்தை அறி முகப்படுத்தினார். இதன்படி 100 ரூபாய் பணம் செலுத்தி குடிநீர், கழிவு நீர் இணைப்பை பெற்ற னர். இந்த சூழலில், தனி யார் நிலங்களில் குடியிருப் போரிடம் சொத்துவரி வாங்கக்கூடாது என்று மாமன்றத் தீர்மானம் நிறை வேற்றினால் இந்நிலங்களில் குடியிருக்கும் மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, தனியார் மற்றும் அனாமதேய நிலங்க ளில் வசிப்போரிடம் சொத்து வரி வசூலிக்க மாநகராட்சி தீர்மானம் நிறை வேற்ற வேண்டும். இத்தகைய நிலங்களில் குடி யிருக்கும் மக்களுக்கு மின் இணைப்பு, பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதி களை பெற ஆவண செய்ய வேண்டும் என்று அந்தமனுவில்  கூறப் பட்டுள்ளது. “இது தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது. அரசின் கவ னத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மேயர் உறுதி அளித்ததாக எம்.சரஸ்வதி தெரிவித்தார்.