பெருநகர சென்னை அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஞாயிறன்று (ஜன.15) ஜெயலட்சுமிபுரத்தில் மத ஒற்றுமையை வலியுறுத்தி கோலப்போட்டி நடைபெற்றது. அழகியல் மற்றும் கருத்தோடு கோலம் வரைந்தவர்களுக்கு சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா, ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர் வெ. ரவீந்திரபாரதி, அமைப்புசாரா சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் வி.செந்தில் குமார் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர். பகுதித்தலைவர் அ. இரணியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் செயலாளர் எஸ்.கோபாலகிருஷ்ணன், பொருளாளர் வி.பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.