கடலூர்,ஆக.5-
இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த மூன்று வாலிபர்களுக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து கடலூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது.
கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே ஊத்தங் கால் பகுதியை சேர்ந்தவர் விஜய் (23). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன் பழகி வந்துள்ளார். 2.1.2019 அன்று அந்த இளம்பெண்ணை விஜய் இருசக்கர வாக னத்தில் ஏற்றி சென்றுள்ளார்.
அந்த பகுதியில் உள்ள ஒரு ஏரிக்கரைக்கு அழைத்து சென்று பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். அப்போது, அங்கு மறைந் திருந்த மூன்று பேர் குடி போதையில் அந்த பெண்ணி டம் தகாத முறையில் நடந்த கொண்டதுடன் பாலியல் வன்புணர்ச்சியிலும் ஈடு பட்டனர். பாதிக்கப்பட்ட அந்த பெண், நடந்த சம்ப வங்களை தனது பெற்றோரி டம் தெரிவித்தார்.
இதையடுத்து, அவரது பெற்றோர் நெய்வேலி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அந்த பகுதியில் பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமரா காட்சி களை ஆய்வு செய்தனர்.
பிறகு, விஜய் (23), முரளி (19), பிரபுராஜ் (22), வேல்முருகன் (20) ஆகிய 4 பேரையும் கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், வழக்குப் பதிவு கடலூர் வன் கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக் கில் நீதிபதி உத்தமராசா சனிக்கிழமை (ஆக.5) தீர்ப்பு கூறினார்.
குற்றம் நிரூபிக்கப்பட்ட தால் விஜய், வேல்முருகன், பிரபுராஜ் ஆகிய மூன்று பேருக்கு வாழ்நாள் முழுவ தும் சிறை தண்டனையும், தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார். இந்த அபராதத் தொகை மூன்று லட்சத்தையும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.
இந்த வழக் கில் அரசு தரப்பில் வழக்கறி ஞர் வனராசு ஆஜராகி வாதா டினார். வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது ஜாமீனில் வெளி வந்த குற்றவாளி முரளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.