சிதம்பரம், ஜன. 10- புவனகிரி அருகே உள்ள சேத்தியாத் தோப்பு எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி கூட்டு றவு சர்க்கரை ஆலையில் 2023-24 ஆம் ஆண்டிற்கான கரும்பு அரவை பணி துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி னார். வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அரவை பணி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், ஆலையில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட நவீன மயமாக்கப்பட்ட ஆய்வுக்கூடம், ஹைட்ராலிக் டிப்பர் இயந்திரம், தானியங்கி எடை, கரும்பு தளத்தில் தார் சாலை அமைத்தல், எத்த னால் உற்பத்தி ஆலை திட்டம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை தொடங்கி அமைச்சர் துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன், சர்க்கரை துறை ஆணையர் முதன்மை செயலாளர் விஜயராஜ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க சிறப்புத் தலைவர் ஆதிமூலம், தலைவர் அண்ணாதுரை, செயலாளர் ரெங்கசாமி, பொருளாளர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.