விழுப்புரம், பிப்.17- பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் நிறை வேற்றினர். விழுப்புரத்தில் சனிக்கிழமையன்று நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் தி.க. இராமசாமி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் க.பிச்சைவேலு வேலை அறிக்கையை சமர்ப்பித்தார், மாநில பொருளாளர் ச.பாலகிருஷ்ணன் வரவு- செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். முன்னாள் மாநிலத் தலைவர் எம்.சௌந்தரராஜன் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார். மாநில நிர்வாகிகள் இரா.பட்டாபிராமன், கே.எஸ்.மாரியப்பன், பா.சிவக்குமார், த.இராம கிருட்டிணன், ரா.நவநீதகிருஷ்ணன், க.ஆனந்தன் இல.விஜய ராமலிங்கம், த.வினோத் ராஜா, உ.சிங்கரவேல், பி.விஜயன், கே.சந்திரபோஸ் அ,சாம் டேனியல் ராஜ், ரா.சிவ பழனி,கடலூர் மாவட்ட செயலாளர் ப.வேலாயுதம், கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிர் அணி ஜி.எஸ்.பிரியதர்ஷினி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 21 மாத ஊதிய நிலுவைத்தொகையை வழங்க வேண்டும், கொரோனா காலத்தில் முந்தைய அரசால் நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு நிதிபலன்களை திரும்ப வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.