வந்தவாசி நகராட்சி சார்பில் மக்களுடன் முதல்வர் திட்ட துவக்க விழாவை செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர் எம். எஸ். தரணிவேந்தன், சட்டமன்ற உறுப்பினர் அம்பேத் குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நகர மன்ற தலைவர் எச்.ஜலால், ஆணையர் மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில் தனிநபர் கடன் வழங்க கோரி விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டது.