districts

img

ஆவடியில் அரசு பள்ளிக்கு ரூ.8 கோடி மதிப்பீட்டில் வகுப்பறைகள்

அம்பத்தூர், மார்ச் 4- ஆவடியில் உள்ள அரசு  பள்ளிகளுக்கு ரூ.8 கோடி யில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணியை சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் திங்களன்று (மார்ச் 4) அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். ஆவடி மாநகராட்சிக்குட் பட்ட 33ஆவது வார்டு கோணாம்பேடு பகுதியில் மாநகராட்சி தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி களில் போதிய வகுப்பறை கள் இன்றி மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் கவனத்திற்கு, மாநகராட்சி உறுப்பினர் வே.அரி கொண்டு சென்றார். இதையடுத்து  பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை உயர் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். இதை யடுத்து பள்ளிகளுக்கு கூடுதலாக 20 வகுப்பறை கள் கட்ட ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து  வகுப் பறைகள் கட்டும் பணிகளை நாசர் எம்எல்ஏ திங்களன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அதே பகுதியில் ரூ.14.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய  நியாய விலைக் கடையை யும் அவர் திறந்து வைத் தார். இதில் மேயர் கு.உதய குமார், மண்டலக் குழு  தலைவர்கள் ஜி.ராஜேந்தி ரன், அமுதா சேகர், பொறி யாளர் பி.வி.ரவிச்சந்திரன், திமுக மாநகரச் செயலாளர் சண்.பிரகாஷ், மாமன்ற உறுப்பினர் வே.அரி  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.