அரசின் தனியார்மய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வடசென்னை மாவட்டம் சார்பில் ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் ஜெய்கணேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் வே.விஜயகுமரன், தாமோதரன், கருணாகரன், பாஸ்கரன், ரமேஷ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.