districts

img

என்எல்சியை பாதுகாக்க சிஐடியு நடைபயண பிரச்சாரம்

கடலூர்,செப்.23-  என்எல்சி நிறுவனத்தை பொது துறையாக பாதுகாக்க கோரி சிஐடியு சார்பில் நெய்வேலியில் செப்,21, 22 ஆகிய இரண்டு நாட்கள் பிரச்சாரம் நடைபெற்றது.  இந்த பிரச்சாரத்தில் காலி பணியிடங்களை நிரப்பிட வலியுறுத்தியும், வாரிசுகளுக்கு வேலை கொடுக்க வலியுறுத்தியும், நிலம் அளித்தவர்களுக்கு நிரந்தர வேலை, கொடுக்கக்கூடிய அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களும் 2020 ஆம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் ஒரே மாதிரியான சம்பளம் 26 நாட்கள் வேலை வழங்கிட கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த நடைபயண பிரச்சாரம் நடைபெற்றது.  செப் 21 அன்று தொடர்ந்த பிரச்சாரம்  புது குப்பம் ரவுண்டானாவில் இருந்து தொடங்கி சூப்பர் பஜார் வரை சென்றது. இதில் சிஐடியு மாவட்ட தலைவர் பி.கருப்பையன், மாவட்ட செயலாளர் டி.பழனிவேல் ஆகியோர் பேசினர். வெள்ளியன்று மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி மெயின் பஜார் காமராஜர் சிலை வரை நடைபெற்றது. இதில் சிஐடியு சங்கத்தின் சிறப்பு தலைவர் எஸ். கண்ணன் சிறப்புரை ஆற்றினார்.  இந்த பிரச்சாரத்தில் சிஐடியு பொதுச் செயலாளர் எஸ்.திருஅரசு, தலைவர் டி.ஜெயராமன், நிர்வாகிகள் ஆர். பாலமுருகன், சீனிவாசன், குப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.