கடலூர், டிச.14- நெய்வேலி நகர நிர்வாக சீர்கேட்டை கண்டித்து சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. நெய்வேலி நகரத்தில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளுக்கு காரண மான சாலைகளில் சுற்றித்திரி யும் மாடுகள், நாய்கள், ஆடு களை பிடித்து உரிமை யாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். என்எல்சி குடியிருப்பு களில் சேதமடைந்துள்ள கதவு, ஜன்னல்களை சீரமைத்து பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும். எரியாத தெரு விளக்கை சரி செய்து, தெருக்களில் குவிந்து கிடக்கும் குப்பை களை அகற்ற வேண்டும். குடிநீர் விநியோகிக்கும் நேரத்தை காலை 5 மணிக்கு தொடங்கி 8 மணி வரை தொடர வேண்டும். பாலங்கள் மற்றும் சாலை களில் தடுப்புகளில் விபத்துக்களை தடுக்க பிரதிபலிப்பான் அமைக்க வேண்டும். நகரில் தொடரும் திருட்டு, கொலை, கொள்ளை மற்றும் செயின் பறிப்புகள் தடுத்திட இரவு ரோந்தை அதிகப்படுத்துவதோடு சிசி டிவி கேமரா செயல்படு வதை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு என்எல்சி தொழிலாளர் ஊழியர் சங்கத்தின் சார்பாக நெய்வேலி மெயின் பஜாரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் டி. ஜெயராமன் தலைமை தாங்கினார். பொது செயலாளர் எஸ்.திரு அரசு, பொருளாளர் எம்.சீனிவாசன், சிபிஎம் நகர செயலாளர் ஆர்.பாலமுருகன்,சிஐடியு சங்க நிர்வாகிகள் வி. குமார், எஸ்.முருகன், பி.பழனி வேல், என்.ரமேஷ், வேலாயுதம், சந்திரன், ஒப்பந்த சொசைட்டி சங்க நிர்வாகிகள் அமிர்தலிங்கம், வேல்முருகன் உள்ளிட் டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.