districts

img

வாரிசுக்கு வேலை கேட்டு நெய்வேலியில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

கடலூர், மார்ச் 2-  நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் வாரிசு களுக்கு வேலைவழங்கக்கோரி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இன்கோவிலில் இருந்து நிரந்தரமான வர்களுக்கு நிரந்தரமான தேதியிலிருந்து டபிள்யு 3 ஸ்கேல் வழங்க வேண்டும்,  பொறி யாளர் மற்றும் அதிகாரிகள் தொழி லாளர்கள் என தனித்தனியாக உள்ள டிரஸ்டை ஒன்றாக இணைத்து வழங்க வேண்டும். அதிகாரிகளுக்கு உள்ளது போல் தொழிலாளர்களுக்கு பர்னிச்சர் லோன், லேப்டாப், மொபைல் போன் சலுகைகளை வழங்கவேண்டும், காலி பணியிடங்களில் வாரிசு, நிலம், வீடு கொடுத்தவர்கள், இறந்தோர் வாரிசு, அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு என்எல்சி தொழிலாளர் ஊழியர் சங்கத்தின் சார்பாக மெயின் பஜார் காமராஜர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு  தலைவர் டி.ஜெய ராமன் தலைமை தாங்கினார்.  பொது செயலாளர் எஸ்.திருஅரசு, பொருளாளர் எம்.சீனிவாசன், காண்டிராக்ட் சங்க சிறப்பு தலைவர் ஏ.வேல்முருகன், சிபிஎம் நகர செயலாளர் ஆர்.பாலமுருகன், சிஐடியு நிர்வாகிகள் எஸ்.ஆரோக்கியதாஸ், எம்.சந்திரன், வி.குமார், எஸ்.முருகன்,  பி.புண்ணியமூர்த்தி, என்.வீராசாமி, ஜே.சாமுவேல், பி.பழனிவேல், எம்.சம்பத், காண்ட்ராக்ட்-  சொசைட்டி சங்க பொதுச் செயலாளர் டி.அமிர்தலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.