கடலூர், மார்ச் 16- என்எல்சி நிறுவனத்தின் 7 விழுக்காடு பங்குகளை விற்பனை செய்யும் ஒன்றிய அரசை கண்டித்து, பங்கு விற்பனை முடிவை உடனடியாக கைவிட வலியுறுத்தியும் நெய்வேலி காமராஜர் சிலை அருகில் சிஐடியு காண்ட்ராக்ட் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏ.அன்பழ கன் தலைமை தாங்கினார். சங்கத்தின் துணைத் தலைவர் ஏ.ராயப்பன், தலைவர் பி.பழனிச்சாமி, பொதுச்செயலாளர் டி. அமிர்தலிங்கம், சிஐடியு என்எல்சி தொழிலாளர் ஊழியர் சங்கத்தின் துணைத் தலைவர் ஆர்.பால முருகன், மாவட்டப் பொரு ளாளர் எம்.சீனிவாசன் உள்ளிட்டோர் கோரிக்கை களை வலியுறுத்தி பேசினர்.