புதுச்சேரி,ஜன.19- தொழிலாளர் நல சட்டங்களை பாதுகாக்கக் கோரி புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய மாநில அரசுகள் தொழிலாளர் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். போராடிப் பெற்ற தொழிலாளர் நல சட்டங்களை பாதுகாக்க வேண்டும். 40 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளை நினைவு கூறும் வகையில் இப்போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியு பிரதேசத் தலைவர் முருகன் தலைமை தாங்கினார். முன்னாள் செயலாளர் பெருமாள், பிரதேச செயலாளர் சீனிவாசன், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் புதுச்சேரி பிரதேச துணைத் தலைவர் பத்மநாபன், செயலாளர் சங்கர், விவசாய தொழிலாளர் சங்கத் தலைவர் உலகநாதன், செயலாளர் மணிபாலன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.