திருவள்ளூர், ஜூன் 15-
பழவேற்காடு பகுதியில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வேலை வழங்கவும் மற்றும் போராடும் தொழிலாளர்கள் மீது அதானி மற்றும் எல் அண்டு டி நிறுவனங்கள் பொய் வழக்கு பதிவு செய்வதை கண்டித்து சிஐடியு சார்பில் புதனன்று (ஜூன் 14) எல்அண்டுடி கேட் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொன்னேரி வட்டம், பழவேற்காடு பகுதியை சுற்றியுள்ள 32 மீனவ கிராம மக்கள் மீன்பிடி தொழிலை வாழ்வாதார மாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் எல் அண்ட் டி கப்பல் கட்டும் தளம், வடசென்னை அனல் நிலையம், வல்லூர் அனல் மின் நிலையம், சிபிசிஎல் கப்பல் கட்டும் துறைமுகம் போன்ற பல்வேறு தொழிற்சாலையின் கழிவுகள், பழவேற்காடு ஏரி மற்றும் கடலில் கலப்பதால் மீன்பிடித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் மீன் பிடி தொழில்பாதிக்கப்பட்ட வர்களுக்கு, அரசு வேலை வழங்க வேண்டும் என்கிற அடிப்படையில் 1991ல் முதல் கட்டமாக 250 மீனவர்களுக்கு வேலை வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வில்லை. ஊதிய உயர்வும் வழங்கப்பட வில்லை. இதனால் அந்த குடும்பங்கள் பெரிதும் பாதிக்கின்றனர். மாவட்ட ஆட்சியர், பொன்னேரி கோட்டாட்சியர் ஆகியோர் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகத்தை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினாலும், மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மதிப்ப தில்லை.பணி நிரந்தரம், ஊதிய உயர்வை யும் நிராகரித்து வருகின்றனர். இந்நிலையில் சிஐடியு சங்கம் வைத்து போராடினால், காட்டூர் நிலைய காவல்துறையினரை வைத்து பொய் வழக்கு பதிவு செய்து அச்சுறுத்துகிறது. பழிவாங்கும் நடவடிக் கையை எடுத்து வருகிறது. இதனை கண்டித்தும் அரசு தலையிட வலியுறுத்தியும் சிஐடியு சார்பில் புதனன்று (ஜூன் 14) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி.வினாயகமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் சிஐடியு மாநில உதவி பொதுச் செயலாளர் வி.குமார், மாநில துணைத் தலைவர் கே.விஜயன், திருவள்ளூர் மீன்பிடி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் டி.நித்யா னந்தம், மாவட்ட நிர்வாகிகள் எஸ்.நரேஷ் குமார், இ.ஜெயவேல், ஜி.பாண்டியன், ஜி.காஞ்சனா, ஜி.சிசுலியா, என்.நாகம்மாள், எச்.சதீஷ்,எஸ்.சூரியநாராயணன்,கே.வெங்கடேசன், எஸ்.ராஜேஷ், ஆர்.குகன் ஆகியோர் பேசினர்.