கடலூர், அக்.22- பழுப்பு நிலக்கரி நிறுவ னத்தில் பணியாற்றும் ஊழி யர்கள் 24 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி நெய்வேலியில் சிஐடியு சார்பில் ஊர்வலம் நடை பெற்றது. இன் கோசர்விலிருந்து நிரந்தரமானவர்களுக்கு டபிள்யூ3 ஸ்கேல், புதிதாக பணி நிரந்தரம் செய்யப் பட்டவர்களுக்கு பணியில் சேர்ந்து அன்று சீருடை, மழை கோட் வழங்க வேண்டும்.சி-டைப் வீடு, பயிற்சி காலத்தில் அலவன்ஸ், இன்கேசர்விலிருந்து நிரந்தர மானவர்கள் எத்தனை ஆண்டுகள் பணி செய்து இருந்தாலும், அனைவருக் கும் கிராஜூட்டி வழங்க வேண்டும். 2021- 23 ஆம் ஆண்டு கணக்கின்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டியவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் தலைவர் டி.ஜெயராமன் தலைமையில் ஊர்வலம் நடத்தினர். பிறகு,சங்கத்தின் சிறப்பு தலைவர் எஸ்.கண்ணன் தலைமையில் என்எல்சி அதிகாரியை சந்தித்தனர். அப்போது, கோரிக்கை மனுவை கொடுத்தனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.பழனிவேல், என்எல்சி தொழிலாளர் ஊழி யர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.திருஅரசு, பொருளாளர் எம்.சீனிவா சன், காண்ட்ராக்ட் சொசைட்டி சங்க நிர்வாகி கள் பழனிசாமி, அமிர்த லிங்கம், வேல்முருகன், நிர்வாகி டி.ஆறுமுகம், முன்னாள் நிர்வாகிகள் முத்துவேல், முருகேசன், மணி, மணிமாறன், அலுவ லக செயலாளர் எம்.அன்பழ கன் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.