மத்தியசென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு வாக்கு கேட்டு, சிஐடியு ஆயிரம் விளக்கு ஒருங்கிணைப்பு குழு சார்பில் வாக்கு சேகரிப்பு இயக்கம் நடைபெற்றது. இ.சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தை சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை தொடங்கி வைத்தார். அமைப்புசாரா சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி.செந்தில்குமார், கட்டுமான சங்க மாவட்டத் தலைவர் பி.ஏழுமலை, அமைப்புசாரா சங்க பகுதிச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.