districts

img

ஆட்டோ கிளை உதயம்

ராணிப்பேட்டை, அக். 25- ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏகாம்பர நெல்லூர் கூட்ரோட்டில் சிஐடியு ஆட்டோ ஓட்டுநர் தொழிலாளர் சங்கத்தின் கிளை திறப்பு விழா புதனன்று (அக். 25) கிளை தலைவர் எஸ். கிருபாகரன் தலைமையில் நடைபெற்றது.கிளை செயலாளர் என். சுப்பிரமணி, துணைத் தலைவர் எஸ். தினகரன், துணை செயலாளர் வி. பஞ்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சங்கத்தின் கவுரவ தலைவர் ஆர். வெங்கடேசன், சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் கே. ரமேஷ், கட்சியின் தாலுகா செயலாளர் ஆர். மணிகண்டன் ஆகியோர் கொடி ஏற்றி பெயர் பலகை திறந்து வைத்தனர். ருத்ரமூர்த்தி, ஜெயஸ்ரீ, மருதம் பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ். லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். கிளை பொருளாளர் கே. தினகரன் நன்றி கூறினார்.