உளுந்தூர்பேட்டையில் சிஐடியு, ஏஐடியுசி சார்பில் மே தின விழா பேரணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. பேரணியை மாற்றுத்திறனாளிகள் கள்ளக்குறிச்சி மாவட்ட சங்க செயலாளர் எம்.ஆறுமுகம் கொடி அசைத்து துவங்கி வைத்தார் விருத்தாசலம் மும்முனைசந்திப்பு வழியாக பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட பொதுக்கூட்ட மேடைக்கு பேரணி வந்தடைந்தது. சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜயகுமார்,மற்றும் ஏஐடியுசி மாநில நிர்வாகி ஆ.வளர்மதி,தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிஐடியு மாநில செயலாளர் கே.ஜி.கோபிகுமார், ஏஐடியுசி நிர்வாகி பி.எஸ்.மாசிலாமணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.செந்தில் ஏஐடியுசி மாவட்டத் துணைத் தலைவர் கே.எஸ்.அப்பாவு உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.