districts

img

அடிப்படை வசதிகள் கிடைக்காத சோக்காடி தலித் மக்கள்

கிருஷ்ணகிரி,நவ.23- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கேஆர்பி அணைக்கு பின்புறம் உள்ளது சோக்காடி கிராமம். இங்கு 150 தலித் மற்றும் மாற்று சமூகத்தை சேர்ந்த 500 குடும்பங்கள் வசிக்கின்றன. சமீபத்தில் ஆதிக்க சாதி யினரால் தாக்குதலுக்குள்ளான தலித் குடும்பங்களை மார்க்சிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்டச் செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் வட்டச் செயலாளர் ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பெரியசாமி, லெனின் முருகன், விவசாயத் தொழி லாளர் சங்க தலைவர் ராஜா ஆகி யோர் சோக்காடி  கிராமத்திற்கு  சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். பிறகு, கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பிறகு செய்தி யாளர்களை சந்தித்தனர். அப்போது, இந்த கிராமத்தில் வசிக்கும் பெரும்பான்மையான தலித் மக்களுக்கு வீட்டுமனை, விவசாய நிலம் எதுவும் கிடை யாது. அதனால், அவ்வப்போது கிடைக்கும் கூலி வேலைகளுக்கு சென்று அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை கொண்டு வாழ்க்கையை நகர்த்தி வருகின்ற னர். ஒரே குடிசையில் 3 தலைமுறை குடும்பத்தினர் 6,7 பேர் வரை கூட்டு குடும்பங்களாக வாழ்ந்து வருகின்றனர். இதனால், இலவச வீட்டுமனையும், பட்டாவும் கேட்டு தொடர்ந்து மனு கொடுத்து வரு கின்றனர். வட்டாட்சியர் கண்டுக் கொள்ளவில்லை. மாவட்ட ஆட்சி யரும் பாராமுகமாக இருந்து வரு கிறார். 12 ஆண்டுகளுக்கு முன்பு தலித் மக்கள் வசிக்கும் ஒரு சில தெருக்களுக்கு மட்டும் சிமெண்ட் சாலை அமைத்து கொடுத்த னர். அதுவும் குடிநீர் குழாய் அமைத்து கொடுப்பதாக கூறி சேதப்படுத்தியுள்ளனர். அந்த சாலை இதுவரைக்கும் சீரமைத்து கொடுக்கவில்லை. தலித் மக்களுக்கு முறையாக குடி தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். தெரு மின் கம்பங்களில் விளக்குகள் கூட எரியவில்லை. பழுதான மின் விளக்குகள் சீர்படுத்தாமல் ஆண்டு கணக்கில் இருளில் மூழ்கி கிடக்கிறது.  வீடுகளுக்கு தனிநபர் கழிப்பிடம் கட்டித் தரப்படவில்லை.பொது கழிப்பறை வளாகம் கிடையாது. திறந்த வெளிகளில் தான் காலை கடன்களை கழிக்க வேண்டிய அவல நிலை உள்ளது. ஓரிரு சாலை களில் உள்ள கழிவுநீர் கால்வாய் சிதிலமடைந்து தூர்வாரப்படாமல் உள்ளது. எனவே, ஊராட்சி நிர்வாகம் துறை அதிகாரிகள் உட னடியாக தலையிட்டு தலித் மக்க ளின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். தவறினால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவோம்” என்றனர்.