districts

குழந்தைகளுக்கு கழுதை, மாட்டு பால், தேன் கொடுக்க கூடாது

வேலூர், ஆக.4-

      வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நல பிரிவு சார்பில் உலக தாய்ப்பால் வார தின விழா ஒரு வாரம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி தாய்ப்பால் குறித்த  விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பாப்பாத்தி தலைமை தாங்கி னார்.  

    சென்னை குழந்தைகள் நல மருத்துவக் கல்லூரி பேராசிரியர் மற்றும் பச்சி ளம் குழந்தைகள் நிபுணர் அனிதா கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசினார். அப் போது அவர் கூறியதாவது:-  

    குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் அவசியம் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு 2 மணி நேரத்திற்கு ஒரு முறை பால் கொடுக்க வேண்டும். கட்டாயம் 6 மாதத் திற்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.  

    மாட்டுப் பால், பால் பவுடர், தேன், சர்க்கரை தண்ணீர், கழுதை பால் போன்றவை கொடுக்க கூடாது. தாய்மார்கள் குழந் தைக்கு பால் கொடுக்கும் போது ‘கங்காரு’ அரவ ணைப்பு போன்ற பால் கொடுக்க வேண்டும். அதி கபட்சமாக 2 ஆண்டுகள் வரை பால் கொடுக்கலாம். இதன் மூலம் குழந்தைகள் ஆரோக்கியமாக வளரும். இவ்வாறு அவர் கூறினார்.  

   இதில் பேராசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.