மயிலாடுதுறைக்கு ரயிலில் சென்றார் முதலமைச்சர்
சென்னை, மார்ச் 3- மயிலாடுதுறை மாவட்ட ஆட்சி யர் அலுவலக புதிய கட்டிடம் மன்னம் பந்தல் ஊராட்சி மூங்கில்தோட்டம் பால்பண்ணை பகுதியில் ரூ.114 கோடியே 48 லட்சம் மதிப்பில் கட்டப் பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை திங்கட் கிழமை (மார்ச் 4) காலை 10 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் ஞாயிறு மாலை 4.15 மணியளவில் சென்னை எழும்பூர் ரயில் நிலை யத்தில் இருந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் மயிலாடுதுறைக்கு புறப்பட்டு சென்றார்.
அரகண்டநல்லூரில் குட்கா விற்ற இருவர் கைது
விழுப்புரம், மார்ச்.3- விழுப்புரம் மாவட்டம், அரகண்ட நல்லூரில் குட்கா கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். அரகண்டநல்லூரில் காவல் துறை யினர் மார்கெட் பகுதியில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அந்தவழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர், அதில் குட்கா பொருட்கள் விற்பனைக்காக கடத்தி செல்வது தெரியவந்தது, அவரை நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் அவர் திரு வண்ணாமலை மாவட்டம், தண்ராம் பட்டு, தென்முடிய னூர் கிராமம், மாரி யம்மன் கோவில் தெருவை சேர்ந்த அருண் (வயது 24), வீரபாண்டி மன்மதன் கோயில் தெருவை சேர்ந்த ரியாஸ் (30) என தெரிய வந்தது. இரு வரையும் காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் 36 கிலோ எடை கொண்ட குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகிய வற்றை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
இன்று11-ம் வகுப்பு பொதுத்தேர்வு
சென்னை,மார்ச் 3- தமிழ்நாட்டில் மாநில பாடத் திட்டத்தின் கீழ் 11ஆம் வகுப்பு படிக்கு மாணவ மாணவிகளுக்கு திங்க ளன்று (மார்ச் 4) முதல் 25ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யில் உள்ள 7,534 மேல்நிலைப் பள்ளி களில் படித்த 3 லட்சத்து 89 ஆயிரத்து 736 மாணவர்கள் மற்றும் 4 லட்சத்து 30 ஆயிரத்து 471 மாணவிகள் என மொத்தம் 8 லட்சத்து 20 ஆயிரத்து 207 பேர் தேர்வெழுத உள்ளனர். மேலும், தனித்தேர்வர்களாக 5,000 மாண வர்கள் தேர்வு எழுத உள்ளனர்.தேர்வர்களின் சந்தேகங்களை தீர்ப்பதற் காக, தேர்வு நடைபெறும் நாட்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை யில் 9498383076, 949838 3075 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்வதற்காக தேர்வுக் கட்டுப்பாட்டு அறை, அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்தில் அமைக்கப் பட்டுள்ளது.
முறைகேடுகளை மறைக்க வெறுப்பு அரசியலை விதைக்கும் பாஜக
விழுப்புரம், மார்ச் 3- விழுப்புரம், திண்டிவனம் ஆகிய மையங்களில் சனிக்கிழமை நாடாளுமன்ற தேர்தல் குறித்த சிபிஎம் ஊழியர் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு விழுப்புரத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் வி.ராதாகிருஷ்ணன், திண்டி வனத்தில் எஸ்.முத்துகுமரன் ஆகி யோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட்கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது பங்கேற்று பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளாக மோடி தலைமையி லான பாஜக ஆட்சி இந்திய நாட்டு மக்களை வாட்டி வதைக்கிறது, வேலையின்மையும், வறுமையும் உச்சத்திலும், விவசாயிகள், தொழிலாளர்கள் வாழ்வு அதுல பாதாளத்திலும் கொண்டு சென்று விட்டது,ஊழல், முறைகேடுகள் அனைத்திலும் முதல் இடத்தில் ஆனால் இவற்றை மூடி மறைக்க மக்கள் மத்தியில் வெறுப்பு அரசியல் விதைத்து வருகிறார். பாஜக மோடி, மாநில உரிமைகளை பறித்து பேரிடர் காலத்தில் ஒரு பைசா கூட உதவி செய்யாத கொடுமை, இத்தகைய பாஜக ஆட்சியை வரும் நாடாளுமன்ற தேர்தலில் அடியோடு வீழ்த்த வேண்டும். அதனோடு கூட்டு சேர்ந்து கடந்த ஐந்து ஆண்டு காலமும் தலை யாட்டி பொம்மையாக செயல்பட்ட அதிமுக தற்போது பாஜகவிட மிருந்து விலகி நிற்பதாக நாடக மாடுவதை தமிழ்நாட்டு மக்கள் நம்ப தயாராக இல்லை,எனவே அதி முகவையும் வரும் தேர்தலில் தோற்கடிக்க அனைவரும் ஒன்றி ணைந்து பாடுபட வேண்டும் என அவர் தெரிவித்தார். ஊழியர் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தென்னிந்திய கால்பந்து போட்டி சென்னையில் இன்று தொடக்கம்
சென்னை,மார்ச்.3- லயோலா கல்லூரி சார்பில் சென்னையில் ஆண்டு தோறும் தென் இந்திய கல்லூரிகள் இடையேயான மர்பி நினைவு கோப்பை கால்பந்து போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டி திங்கட்கிழமை (மார்ச்.3) தொடங்கி 9-ந் தேதி வரை 6 நாட்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் லயோலா, எம்.சி.சி, செயிண்ட் ஜோசப் ( திருச்சி), அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி, ஜாமியா நத்விய்யா கல்லூரி ( கேரளா) உள்பட 20 அணி கள் பங்கேற்கின்றன. நாக் அவுட் மற்றும் லீக் முறையில் போட்டி நடக்கிறது. சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. 2-வது , 3-வது, 4-வது இடங்களுக்கு முறையே ரூ.7 ஆயிரம், ரூ. 5 ஆயிரம், ரூ.3 ஆயிரம் வழங்கப்படுவதுடன் சிறந்த வீரர்களுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்படும் என லயோலா கல்லூரி முதல்வர் ஏ. லூயிஸ் ஆரோக்யராஜ், விளையாட்டு குழு தலைவர் எம். எஸ்.ஜோசப் அந்தோணி, உடற் கல்வி இயக்குநர் எஸ். விஜயகுமார் ஆகியோர் தெரிவித்தனர்
மாற்றுத்திறனாளிகள் சங்க கிளை உதயம்
சென்னை, மார்ச் 3- தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் புதிய கிளைகள் ஆலந்தூர் பகுதியில் உதயமாகி உள்ளன. இந்த கிளைகள் அமைப்பு கூட்டங்களில் சங்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் எம்.குமார், துணைத் தலைவர் பாபு, வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஐயப்பன்தாங்கல் பெருமாள் கோவில் கிளை தலைவராக வேல்முருகன், செயலாளராக யோகலட்சுமி, பொருளாளராக பிரியா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சுப்பிரமணியன் நகர் கிளை தலைவராக ரேகா, செயலாளராக மணிவண்ணன், பொருளாளராக ராமதாஸ், கொளுத்துவாஞ்சேரி கிளை தலைவராக காளியம்மாள், செயலாளராக வேலுச்சாமி, பொருளாளராக தெய்வநாயகி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
செயின் பறித்த வாலிபர் கைது
அம்பத்தூர், மார்ச் 3- பட்டாபிராம் பாரதியார் நகரைச் சேர்ந்தவர் சேர்ந்தவர் மீனலோச்சனி (40). இவர் கடந்த மாதம் 17ஆம் தேதி தனது மகளுக்கு மதிய உணவு வழங்கி விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாக னத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த மர்ம நபர் மீன லோச்சனி கழுத்தில் கிடந்த 4 சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் பட்டாபிராம் குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தினர். விசாரணையில் திருவேற்காடு, அன்பு நகர் பகுதியைச் சேர்ந்த மிட்டாய் கார்த்திக் (27) என்பது தெரிய வந்தது. இதையடுத்து காவல் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், சனிக் கிழமை பட்டாபிராம் ரயில் நிலையம் பகுதியில் கார்த்திக் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறை யினர் அவரை கைது செய்து, அவரிடமிருந்து தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்தனர்.
மோடி வருகை: மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
சென்னை,மார்ச் 3- செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு திங்களன்று பிரதமர் மோடி வரவுள்ளதால், மீன வர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது. ஒரே வாரத்தில் 2-வது முறையாக தேர்தல் பிரசாரத்துக்காக மோடி தமிழகம் வரு கிறார். வருகை தரும் அவர் இந்த முறை சென்னையில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதற்காக மகாராஷ்டிராவில் இருந்து புறப்பட்டு திங்களன்று மதியம் 1.15 மணி அளவில் அவர் சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் பயணம் செய்து முதலில் அவர் கல்பாக்கம் சென்றடைகிறார். இதையொட்டி “மாமல்லபுரம், கொக்கிலி மேடு, மெய்யூர், சட்ராஸ், புதுபட்டினம், உய்யாளி குப்பம் போன்ற 10 கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் அன்று மாலை 6 மணி வரை மீன்பிடிக்க கடலுக்குள் செல்லத் தடை விதிக்கப் பட்டுள்ளதாக” மீன்வளத்துறை அதி காரிகள் தெரிவித்துள்ளனர். சென்ற முறை மோடி தமிழ்நாட்டிற்கு வந்த போதும் தூத்துக்குடி மாவட்டத்தில் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.