தமிழ்நாடு முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, புதுச்சேரி ஒதியஞ்சாலை சந்திப்பில் அமைந்துள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், அரசு கொறடா ஆறுமுகம் (எ) ஏ.கே.டி, சட்டமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், லட்சுமிகாந்தன் கலந்து கொண்டனர்.