districts

புதுவையில் காய்கறி விதை தொகுப்பு முதல்வர் ரங்கசாமி வழங்கினார்

புதுச்சேரி,ஜூலை 20-

     புதுச்சேரியில் காய்கறி விதைகள் தொகுப்பு முதல்வர் என். ரங்கசாமி பயனாளிகளுக்கு  வழங்கினார்.

    புதுச்சேரி அரசின்  வேளாண் துறை மற்றும் விவசாயிகள் நலத் துறையில் தோட்டக்கலை துறை சார்பில் பயிர் சாகுபடி பரப்பளவு மற்றும் உற்பத்தித் திறன் அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

     மக்களுக்கு தேவையான பசுமை மற்றும் தரமான காய்கறிகள் வீட்டின் புறக்கடை மற்றும் மாடியில் தோட்டம் அமைத்து  சாகுபடி செய்வதை ஊக்கப்படுத்தும் வகையில், ஊட்டச்சத்து காய்கறி தோட்டம் அமைக்க ரூ. 230 மதிப்புள்ள காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பை இலவசமாக வழங்கியது.

   புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி இந்த தொகுப்பை வழங்கினார். வேளாண் துறை அமைச்சர் தேனி.சி. ஜெயக்குமார் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.