சென்னை, மார்ச் 22- காஞ்சிபுரம் அருகே வெடி பொருள் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரி ழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்திருக்கும் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ. 3 லட்சம் நிதியுதவியும் அறிவித்துள் ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:- காஞ்சிபுரம் வட்டம், ஓரிக்கை கிராமப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள் சேமிப்புக் கிடங்கில் புதனன்று (மார்ச் 22) எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த துயர மான செய்தியினைக் கேட்டு முதல மைச்சர் மிகுந்த வேதனையடைந் துள்ளார். மேலும், இவ்விபத்தில் படுகாய மடைந்து உயர் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையிலும் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையிலும் அனுமதிக்கப்பட்டுள் ளவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத் தினருக்கும், அவர்களது உறவினர்க ளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு உயிரி ழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், படுகாய மடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு தெரிவிக்கப்பட் டுள்ளது.
அமைச்சர் தா.மோ.அன்பரசன்
இதனிடையே, மாவட்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “காஞ்சிபுரம் மாவட்டத்தில் நான்கு இடங்களில் இதுபோன்ற பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. தற்போது இந்த வெடி விபத்து நடந்த பட்டாசு தொழிற்சாலையில் ஏழு முதல் எட்டு நபர்கள்தான் வேலை செய்ய வேண்டும். ஆனால், 27 பேர் வேலை செய்துள்ளனர். இது தவறு. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் துறைக்கு அறிவுறுத்தியுள்ளோம்”என்றார். இதுபோன்ற தவறுகள் மேலும் ஏற்படாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையிடம் வலியுறுத்தியுள்ளோம். இந்த பட்டாசு ஆலை இயங்க 2024 ஆம் ஆண்டு வரை அனுமதி பெற்றுள் ளது. காஞ்சிபுரத்திலுள்ள மற்ற பட்டாசு தொழிற்சாலைகளிலும் ஆய்வு மேற்கொள்ள வலியுறுத்தி யுள்ளோம். இந்த ஆய்வின்போது தவறு கண்டறியப்பட்டால் நிச்சய மாக உரியவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.