மத்திய ரயில்வே வாரிய தலைவர் மற்றும் தலைமை செயல் அலுவலர் ஜெயா வர்மா சின்ஹா புதனன்று (பிப். 21) ஐசிஎப் நிறுவனத்தின் பொது மேலாளர் யு.சுப்பாராவ், இதர துறைத் தலைவர்கள் மற்றும் ஐசிஎப் ஊழியர் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் ஐசிஎப் பர்னிஷிங் பகுதியில் தயாரிப்பில் உள்ள வந்தே மெட்ரோ மற்றும் வந்தே பாரத் ரயில்களுக்கான ரயில்பெட்டிகளை அவர் பார்வையிட்டார்.