districts

img

சிதம்பரம் வீனஸ் பள்ளி 10-ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம்

சிதம்பரம், மே 10- 10ஆம்வகுப்பு தேர்வில் சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இந்த ஆண்டு சிதம்பரம் நகரில் முதலிடமும், மாநில அள வில் சிறப்பிடமும் பெற்று வெற்றி பெற்றுள்ளது.  வீனஸ்  பள்ளியில் 210  மாணவர்கள் தேர்வு எழுதிய தில் 208 மாணவர்கள் தேர்ச்சி  பெற்று 99 விழுக்காடு தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவி கு.நிவிதா 496 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.  சு.விஷ்ருதி 494மதிப்பெண் எடுத்து இரண்டாமிடமும் ஆ.சுஜித்ரா 493 பெற்று   மூன்றாமிடமும் பெற்றுள்ள னர்.இதில்  208 மாணவர்க ளும் முதல் வகுப்பில் தேர்ச்சி  பெற்றுள்ளனர்.  450 மதிப் பெண்களுக்கு மேல் 88 மாண வர்களும்,  400-க்கு மேல் 58  மாணவர்களும் மதிப்பெண் களை பெற்றுள்ளனர்.  இதில்  கணித பாடத்தில் 29 பேர்,  அறிவியலில் 8பேர், சமூக  அறிவியலில் 11  மாணவர் கள் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர் களுக்கும், உறுதுணையாக  இருந்த பெற்றோர்களுக் கும், தேர்ச்சி பெற அயராது பாடுபட்ட பள்ளியின் துணை  முதல்வர் மற்றும் ஆசிரியர்க ளுக்கும் பள்ளியின் தாளாளர் எஸ்.குமார், முதல்வர் ரூபியல் ராணி, துணை முதல்வர் நரேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வாழ்த்து களை தெரிவித்தனர்.